கூட்டுறவு அமைச்சகம், இந்தியா
கூட்டுறவு அமைச்சகம்[2] என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இந்த அமைச்சகம் வேளாண்மை அமைச்சகத்திலிருந்து பிரித்து[3] சூலை 2021 ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் அமைச்சர் அமித் சா ஆவார். இதன் இணை அமைச்சர் பி. எல். வர்மா ஆவார். இந்த அமைச்சகமானது இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த தனியான நிர்வாகம், சட்டம் மற்றும் கொள்கை கட்டமைப்பை வழங்குகிறது. கீழ்மட்ட அளவில் கூட்டுறவுகளை வலுப்படுத்துவதில் அமைச்சகம் செயல்படுத்துவதுடன்,[4][5] கூட்டுறவுகள் இடையே 'பரிவர்த்தனைகளை எளிமையாக்குவதற்கான' செயல்முறைகளை நெறிப்படுத்தவும், பன்மாநில கூட்டுறவுகளின் (MSCS) வளர்ச்சியை மேம்படுத்த செயல்படுகிறது. 1][6] நோக்கங்கள்அமைச்சகம் பின்வரும் நோக்கங்களுடன் நிறுவப்பட்டது:[7] ஒத்துழைப்பின் மூலம் செழிப்பு பார்வையை உணர்த்துதல். கூட்டுறவு நிறுவனங்களுக்கான ‘எளிதாக வணிகம் செய்வதற்கான’ செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பன்மாநில கூட்டுறவுகளின் (MSCS) வளர்ச்சியை செயல்படுத்துதல். நாட்டில் கூட்டுறவு இயக்கங்களை வலுப்படுத்த தனியான நிர்வாக, சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்பை வழங்குதல். அடித்தளம் வரை சென்றடையும் உண்மையான மக்கள் அடிப்படையிலான இயக்கமாக கூட்டுறவு ஆழப்படுத்துதல். அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய அளவிலான நிறுவனங்கள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia