கேசவானந்த பாரதி
![]() ![]() சுவாமி கேசவானந்த பாரதி (Shri Kesavananda Bharati) (9 டிசம்பர் 1940 – 6 செப்டம்பர் 2020) இந்தியாவின் கேரளா மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள எட்நீர் மடாதிபதியும், சமூக ஆர்வலரும் ஆவார்.[1][2] எட்நீர் மடத்திற்கு சொந்தமான விளைநிலங்களை கேரளா அரசு கையகப்படுத்தியதற்கு எதிரான வழக்கில், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய தனிமனித சொத்துரிமைக்கு எதிராக செயல்பட்ட கேரளா அரசுக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் சுவாமி கேசவாநந்த பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றங்களோ தலையிட உரிமை இல்லை என வரலாற்று முக்கியமான தீர்ப்பு வழங்கியது.[3][4] கேசவானந்த பாரதி சுவாமிகள் முதுமை நோய் காரணமாக மங்களூரு மருத்துவமனையில் தமது 79-வது வயதில் 6 செப்டம்பர் 2020 அன்று மறைந்தார்.[5][6][7][8] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia