கே.எல். சிறீமாலி
கலு லால் சிறீமாலி (K. L. Shrimali) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மத்திய கல்வி அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் கல்வியாளராகவும் இவர் இருந்துள்ளார். 1909ஆம் ஆண்டு இராசத்தான் மாநிலத்தின் உதய்பூரில் சிறீமாலி பிறந்தார். பனாரசு இந்து பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க்கு நகரத்திலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகம்ஆகியவற்றில் கல்வி பயின்றார். 1955ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1963ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வரை மத்திய அமைச்சர்கள் குழுவில் கல்வி அமைச்சராக பணியாற்றினார். 1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1962ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிறீமாலி இராசத்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இராசத்தான் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் [1] பல கல்வி மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் இவர், "இயன் சிக்சன்" என்ற மாதாந்திர கல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்தார். பல நூல்களை வெளியிட்டுள்ளார். இராசத்தானின் உதய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற வித்யா பவன் பள்ளியின்[2] நிறுவனர்களில் இவரும் ஒருவராவார். இது பேடன் பவலின் சிறுவர் சாரணர் இயக்கத்தில் நிறுவப்பட்டதாகும். கல்விக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 1976ஆம் ஆண்டு இவருக்கு பத்ம விபூசண் விருது இந்திய அரசல் வழங்கப்பட்டது.[3] 2000ஆம் ஆண்டு சனவரி மாதம் 5ஆம் தேதியன்று சிறீமாலி தனது 90ஆவது வயதில் இராசத்தான் மாநிலம் உதய்பூரில் இறந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia