4 நவம்பர் 2019 (2019-11-04) – 14 மே 2022 (2022-05-14)
Chronology
தொடர்புடைய தொடர்கள்
மாட்டே மன்றமு
கோகுலத்தில் சீதை என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 4 நவம்பர் 2019 முதல் 14 மே 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காதல் மற்றும் குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரில் நந்தா மற்றும் ஆஷா கவுடா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சி தொடரான 'மாட்டே மன்றமு' என்ற தெலுங்கு மொழி தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது..[2] இத்தொடர் 14 மே 2022 அன்று 705 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதைச்சுருக்கம்
இந்த தொடரின் கதை வசுந்தரா என்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் பாரமப்பரியத்தை காப்பாற்றுபவராகவும் குடும்பத்தின் மீது பாசமும் திருமணத்தின் மீது நம்பிக்கையும் உடையவளும் ஆவாள். பணக்கார வீட்டு பையனா அர்ஜுன் எதையும் நம்பாதவன் விளையாட்டு தனமும் விரும்பியதை அடையும் குணம் கொண்டவன். இரு வெவ்வேறு குணம் கொண்டவர்கள் எப்படி திருமண பந்தத்தில் இணையப்போகின்றார்கள் என்பது தான் கதை.
இந்த தொடரில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடன இயக்குநர் நந்தா முதல் முதலாக தொலைக்காட்சி தொடரில் நடிக்க,[4] இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஆஷா கவுடா என்பவர் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். மேலும் திரைப்பட நடிகை நளினி, காந்திமதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நேர அட்டவணை
இந்த தொடர் 4 நவம்பர் 2019 முதல் 14 மார்ச் 2021 ஆம் ஆண்டு வரை வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. 15 மார்ச் 2021 முதல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஒளிபரப்பான தேதி
நாட்கள்
நேரம்
அத்தியாங்கள்
15 மார்ச் 2021 - ஒளிபரப்பில்
தினமும்
19:00
356-
4 நவம்பர் 2019 - 14 மார்ச் 2021
தினமும்
20:00
1-355
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.