கௌட பிரதேசம்கௌட பிரதேசம் (Gauda Region) (Bengali: গৌড়), பண்டைய பரத கண்டத்தின் மற்றும் மத்திய கால வங்காளத்தில் இருந்த பகுதியாகும்.[1][2] கௌடப் பிரதேசம், பண்டைய வங்க நாடு, அங்க நாடு மற்றும் கலிங்க நாடுகளை கொண்டிருந்தது. அமைவிடமும் விரிவாக்கமும்கௌடப் பிரதேசம் வங்க நாடு, பௌண்டர நாடு மற்றும் காமரூப நாடுகளுடன் கூடியது என சாணக்கியர், (கி மு 350–-283) தான் எழுதிய அர்த்தசாஸ்திரம் எனும் நூலில் கூறியுள்ளார். இப்புவியியல் கருத்தை பண்டைய நூல்களிலும் தொடர்கிறது. [2] கி மு 590 முதல் 625 முடிய வங்காளத்தின் முதல் மன்னரான சசாங்கன், கர்ணசுபர்ணா நகரத்தை (தற்கால முர்சிதாபாத்தின் தலைமையிடமான பெஹரம்பூர்) தலைநகராக கொண்டவன். [1]சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங், சசாங்கன் ஆண்ட கர்ணசுபர்ணா நகரத்திலிருந்து தற்கால ஒரிசா பகுதிகளுக்குப் பயணித்தார்.[2] பௌண்டர நாடு கௌடப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தாக பண்டைய இந்து சாத்திரங்கள் கூறுகிறது.[3] பாலப் பேரரசர்களும், சென் பேரரசர்களும் தங்களை கௌட தேசத்தின் கௌடேஸ்வரர்கள் என அழைத்துக் கொண்டனர்.[1] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia