சங்கர் ராய்சௌத்ரி
தளபதி சங்கர் ராய் சவுத்ரி (Shankar Roychowdhury) இந்தியத் தரைப்படையின் முன்னாள் தலைமைத் தளபதியாவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[1] ஆரம்பகால வாழ்க்கைசங்கர் ராய்சௌத்ரி இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில், வங்காள கயஸ்தா குடும்பத்தில், 1937 செப்டம்பர் 6 அன்று பிறந்தார். கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரிப் பள்ளியிலும், பின்னர் முசோரி உள்ள வின்பெர்க் ஆலன் பள்ளி, முசோரி இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கல்லூரி ஆகியவற்றில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் 1953 ஆம் ஆண்டில் இந்தியப் பாதுகாப்புப் படைகள் கூட்டு சேவைப் பிரிவில் சேர்ந்தார்.[1][2] இராணுவப் பணிசங்கர் ராய்சவுத்ரி இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடத்தில் பட்டம் பெற்ற பிறகு, ஜூன் 9,1957 அன்று இந்திய ராணுவ கவசப் படையில் நியமிக்கப்பட்டார். 1965 ஆம் ஆண்டு சாம்ப்-ஜௌரியன் பிரிவிலும், 1971 ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின் போது ஜெசோர் மற்றும் குல்னாவிலும் பின்னர், இந்தியா-பாகிஸ்தான் போரிலும் பங்கேற்றார். 1974 முதல் 1976 வரை லான்சர்கள், டிசம்பர் 1980 முதல் ஜூலை 1983 வரை ஒரு சுயாதீன கவச படைப்பிரிவு மற்றும் மே 1988 முதல் மே 1990 வரை ஒரு கவச பிரிவு ஆகியவற்றிற்கு தலைமை தாங்கினார். பின்னர் இவர் 1991 முதல் 1992 வரை சம்மு காசுமீரில் 16 கார்ப்ஸ் தலைவராக இருந்தார்.[1][2] கௌரவம்இந்தியாவின் அமைதிகாலத்தில் மிக உயர்ந்தநிலையில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான பரம் விசிட்ட சேவா பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு முன்னோடியான பிபின் சந்திர ஜோஷியின் அகால மரணத்தைத் தொடர்ந்து, நவம்பர் 22,1994 அன்று இந்திய இராணுவத்தின் 18 வது இராணுவத் தளபதியாக பொறுப்பை ஏற்றார்.[3] 40 ஆண்டுகள் இராணுவ சேவையில் இருந்த இவர், 1997 செப்டம்பர் 30 அன்று இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார்.[2][4] ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கைஇராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சங்கர் ராய்சௌத்ரி மாநிலங்களவை உறுப்பினரானார்.[1] 2008 ஜனவரி 21 முதல் இந்திய உலோகம் மற்றும் ஃபெரோ அலாய்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.[2] இவரது சுயசரிதை அதிகாரப்பூர்வமாக அமைதி என்ற தலைப்பில் 2002 இல் பெங்குயின் புக்ஸ் நிறுவனம் வெளியிட்டது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia