சசிகலா அண்ணாசாகேப் ஜொல்லே
சசிகலா அண்ணாசாகேப் ஜொல்லே (Shashikala Annasaheb Jolle)(பிறப்பு 20 நவம்பர் 1969, நீ ஷஷிகலா ஹராதாரே), என்பவர் இந்தியச் சமூக சேவகரும் கருநாடக அரசியல்வாதியும் ஆவார். இவர் 20 ஆகத்து 2019 அன்று பி. எஸ். எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவியேற்றார். நிப்பானி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆவார்.[1][2] சசிகலா 2013 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் நிப்பானி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 81,860 வாக்குகள் பெற்று 14வது கருநாடக சட்டப்பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] இவர் மீண்டும் 2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 87,006 வாக்குகள் பெற்று நிப்பானியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆகத்து 2019 அன்று பி. எஸ். எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவியேற்றார்.[4] இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் காகா சாவ் பாட்டீலையும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஈஸ்வர் காமத்தையும் சசிகலா இத் தேர்தலில் தோற்கடித்தார். பாஜக சார்பில் நிப்பானி சட்டமன்றத் தொகுதி மற்றும் சிக்கோடி-சதலகா சட்டமன்றத் தொகுதிகளில் சசிகலா மற்றும் அவரது கணவர் அண்ணாசாஹேப் ஜொல்லே ஆகியோர் போட்டியிட்டனர்.[5] இருப்பினும், அண்ணாசாகேப் ஜொல்லே கணேஷ் ஹுக்கேரியிடம் இரண்டாவது முறையாக தோல்வியடைந்தார். ஆனால் சசிகலா வெற்றி பெற்றார். அண்ணாசாஹேப் ஜொல்லே பின்னர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் சிக்கோடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia