சத்பாய் வனவிலங்கு சரணாலயம்
சத்பாய் வனவிலங்கு சரணாலயம் (Chadpai Wildlife Sanctuary) வங்காளதேசத்தில் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் ஒரு பூங்காவாகும். 560 எக்டேர் (1400 ஏக்கர்) பரப்பளவில்[1] பேகர்காட் மாவட்டத்தின் கீழுள்ள மோங்லா துணை மாவட்டத்தில் சத்பாய் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு சனவரி மாதம் 29 ஆம் தேதியன்று வங்காளதேச அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக சத்பாய் வனவிலங்கு சரணாலயம் ஒரு வனவிலங்கு சரணாலயம் என அறிவிக்கப்பட்டது.[2] 2012 ஆம் ஆண்டு வங்காளதேச அரசாங்கத்தின் கழுகு பாதுகாப்பு மண்டலம்-2 அட்டவணையின்படி இச்சரணலாயம் கழுகுகளுக்கான பாதுகாப்பான மண்டலங்களில் ஒன்றாகும்.[3] சத்பாய் சதுப்பு நிலம் வங்காளதேசத்தில் உள்ள டால்பின் சரணாலயங்களில் ஒன்றாகும்.[4][5] ![]() 9 டிசம்பர் 2014 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று ஓ.டி சதர்ன் இசுடார் 7 என்ற கொள்கலன் வாகனம் 357,000 லிட்டர் உலை எண்ணெயை ஏற்றிச் சென்றது. மற்றொரு கப்பலுடன் ஏற்பட்ட மோதலால் சுந்தரவனத்தின் கிழக்கு மண்டலத்தின் கீழுள்ள சத்பாய் வனவிலங்கு சரணாலயத்தின் பரப்பில் எண்ணெய் கொட்டியது.[6][7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia