சந்தன மரம்![]() சந்தன மரம் என்பது சாண்டலூம் வகை மரங்களின் ஓரினமாகும். மரங்கள் கனமானவை, மஞ்சள் மணமும்,பலவகை நறுமணமும் உள்ளவை. பல நறுமண காடுகளை போலல்லாமல், பத்தாண்டுகளுக்குத் தங்கள் வாசனைகளை தக்கவைத்துக் கொள்கின்றன. மரக்கட்டைகளில் இருந்து சந்தன எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஆப்பிள் கருமரத்திகுப் பிறகு, உலகிலேயே இரண்டாவது மிக விலையுயர்ந்த மரமாகும். சந்தன மரமும் எண்ணெயும் இரண்டும் தனித்த வாசனையை உருவாக்குகின்றன. அவை பல நூற்றாண்டுகளாக மிகவும் மதிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, இந்த மெதுவாக வளர்ந்துவரும் மரங்களின் இனங்கள் கடந்த நூற்றாண்டில் அதிக அறுவடைகளைச் சந்தித்தன.[1][2] விவரிப்புசந்தன மரங்கள் நடுத்தர அளவிலான பகுதி ஒட்டுண்னித் தாவரம் ஆகும். இது ஐரோப்பிய புல்லுருவி போலவே அதே தாவரக் குடும்பத்தின் பகுதியாகும். இந்த குழுவில் குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் இந்தியச் சந்தனம் Santalum album, ஆஸ்திரேலிய சந்தனம் Santalum spicatum இனம் மற்றவர்கள் மணம் கவர்ந்த மரங்களாகும். இவை இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாக்கித்தான், இலங்கை, ஆத்திரேலியா, இந்தோனேசியா அவாய்,ம் பிற பசிபிக் தீவுகளில் காணப்படுகின்றன. உலகின் விலைமதிப்புள்ள மரங்களில் ஒன்றாக ஆப்பிரிக்கக் கருமரம் (African blackwood), கருங்காலி, செந்தந்த மரம் (pink ivory), அகில் மரம் ஆகியவற்றின் வரிசையில் சந்தன மரம் திகழ்கிறது.[3][4] உணவுகள சந்தன மரமான குவங்தாங்கின்(சாந்தலம் அக்குமினாட்டம்) பருப்பு, கொட்டை,பழங்களை ஆத்திரேலியப் பழங்குடியினர் உண்கின்றனர்.[5] காய்ச்சிவடித்தல்சந்தன எண்ணெய் மரத்தை காய்ச்சி வடித்துப் பிரித்தெடுக்கப்படுகிறது. இதர்கு நீராவிக் காய்ச்சிவடித்தல் பரவலாக சந்தன எண்ணெஉத் தொழிலகங்களில் பயன்படுகிறது. வணிகப்பயன்உயர்ந்த அளவு வாசனை எண்ணெய்கள் கொண்ட வணிக மதிப்புமிக்க சந்தனம் தயாரிக்க சாண்டலியம் மரங்கள் குறைந்தது 15 அகவையைக் கொண்டிருக்க வேண்டும். விளைச்சல், தரம்,அளவு ஆகியனஇன்னும் தெளிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டும். மரத்தின் அகவை, இருப்பிடத்தைப் பொறுத்து எண்ணெய் விளைச்சல் மாறுபடுகிறது. வழக்கமாக பழைய மரங்கள் அதிக எண்ணெய் உள்ளடக்கமும் தரத்தையும் அளிக்கின்றன. 2018 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் மிகப்பெரிய தொழில்வல்லுனரான எஸ்.எஸ்.ஏ. ஆல்பம் ஆத்திரேலியாவில் இருக்கும், பெரும்பான்மை மேற்கு ஆத்திரேலியாவின் குன்நூராராவில் வளர்க்கிறது. மேற்கு ஆத்திரேலியச் சந்தனம் பெர்த்தில் கிழக்கிலும் கோதுபாபு கிழக்கிலும் அதன் மரபாக வளர்ந்துவரும் பகுதியில் பயிரிடப்படுகிறது, அங்கு 15,000 எக்டேர் (37,000 ஏக்கர்) தோட்டங்களில் சந்தன மரங்கள் உள்ளன. சந்தன மரங்கள் பிறவகைக் காடுகளுடன் ஒப்பிடும்போது விலையுயர்ந்தவை. எனவே, வருவாயை அதிகரிக்க, சாந்து வளர்ப்பு முழு மரத்தையும் அகற்றி, அறுவடை செய்யப்படுகிறது. இவ்வகை மரத்தில் இருந்து அதிகமான சந்தன எண்ணெய் கொண்டிருக்கும் தண்டு, வேர் ஆகியவை அறுவடை வ்செய்யப்பட்டு விற்கப்படுகிறது. மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia