சமயக்குரவர்![]() சமயக்குரவர் என்பவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் ஆவர். இவர்கள் சைவ சமயத்தின் தேவாரம் மற்றும் திருவாசகத்தினை எழுதியவர்கள். இவர்களை நால்வர் என்றும் நால்வர் பெருமக்கள் சைவ சமயத்தினர் அழைக்கின்றனர்.[1] சமயக்குரவர் நால்வரின் காலம், செயல்பாடுகள், சைவ நூல்களில் அவர்களுடைய தாக்கங்கள் என பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் எழுதப்படுகின்றன. செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுக்கொண்டும் நூலில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் எந்தக் காலத்தில் நடந்திருக்க வேண்டுமென அறிந்து கொள்கின்றனர்.[2] இந்து ஆய்வுகள் சைவ சமயத்தின் வரலாறுகள் குறித்த ஐயப்பாடுகளை களையவும், சம்பவங்களுக்கு வலுவூட்டவும் உதவுகின்றன. சமயக்குரவர்கள் பற்றி வெளிவந்துள்ள நூல்கள்![]()
கோயில்களில்![]() சிவாலயங்களின் பிரகாரத்தில் நால்வருக்கும் சிலைகளும், தனிச்சன்னதிகளும் அமைக்கப்படுகின்றன. பொதுவாக இடமிருந்து வலமாக ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த வரிசையை மாற்றுவதில்லை. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia