சர் ரத்தன் டாடா அறக்கட்டளை![]() சர் ரத்தன் டாடா அறக்கட்டளை (Sir Ratan Tata Trust) என்பது ₹ 8 மில்லியன் தொகை மூலதனத்தைக் கொண்டு சர் இரத்தன்ஜி டாடாவின் விருப்பத்தின் பேரில் 1919-ல் உருவான ஒரு அறக்கட்டளையாகும். [1] இந்த அறக்கட்டளை இப்போது இந்தியாவில் மிகப் பழமையான நிதிகளை வழங்கும் அறக்கட்டளைகளில் ஒன்றாகும் [2] அறக்கட்டளை, சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக, வளர்ச்சி செயல்முறைகளில் கருவியாக இருந்து வருகிறது. கிராமப்புற வாழ்வாதாரங்கள், சமூகங்கள், கல்வி, சுகாதாரம், குடிமைச் சமூகத்தை மேம்படுத்துதல், ஆட்சி, கலை, கைவினைப்பொருட்கள், கலாச்சாரம் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு நிதிகளை வழங்குகிறது. [3] [4] அறக்கட்டளை புதுமையான மற்றும் நிலையான முயற்சிகளில் ஈடுபடும் நிறுவனங்களுடனும், காணக்கூடிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் ஆற்றலுடனும் நிதிகளையும் கூட்டாளரையும் வழங்குகிறது. இது சொத்துகளுக்கான மானியங்களையும் வழங்குகிறது. சிறிய மானியங்களுக்கு ஒரு தனித் திட்டத்தைக் கொண்டுள்ளது. மேலும் கல்விக்காகவும், மருத்துவ நிவாரணத்திற்கான தனிநபர்களுக்கும் மானியங்களை வழங்குகிறது. அறக்கட்டளை திரு. அருண் பாண்டி (தலைமை மேம்பாட்டு மேலாளர் மற்றும் அனைத்து திட்டங்களுக்கும் ஒட்டுமொத்த பொறுப்பாளர்), தலைமையில் பி.எஸ்.தராபொரேவாலா என்பவருடன் (செயலாளர் மற்றும் தலைமை கணக்காளர் மற்றும் ஒட்டுமொத்த அனைத்து நிர்வாக மற்றும் நிதி விஷயங்களுக்கும் பொறுப்பானவர்) செயல்படுகிறது. அறக்கட்டளை வழங்கும் மானியங்களை இவ்வாறு பரவலாக வகைப்படுத்தலாம்: [5]
நிறுவன மானியங்கள்இந்த மானியங்களில் பெரும்பகுதி கிராமப்புற வாழ்வாதாரங்கள், சமூகங்கள், கல்வி ஆகிய துறைகளில் உள்ளன. கிராமப்புற வாழ்வாதாரங்களுக்கும், சமூகங்களுக்குள்ளும் அறக்கட்டளை இரண்டு பரந்த பகுதிகளுக்குள் முக்கிய முயற்சிகளில் கவனம் செலுத்துகிறது:
கல்வி மானியங்கள்இந்த திட்டத்திற்கு தற்போது செல்வி அமிர்தா பட்வர்தன் என்பவர் தலைமை தாங்குகிறார்.
சுகாதார மானியங்கள்இந்த திட்டத்திற்கு தற்போது மருத்துவர் விக்ரம் குப்தா தலைமை தாங்குகிறார்
குடிமைச் சமூகத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்துவதற்கான மானியங்கள்இந்த திட்டத்திற்கு தற்போது செல்வி வர்திகா ஜெய்னி என்பவர் தலைமை தாங்குகிறார்
கலை, கைவினைப்பொருட்கள் ,கலாச்சாரம்கலை நிகழ்ச்சிகளில் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துதல்இந்த துணை கருப்பொருளின் கீழ், அறக்கட்டளைகள் கலைஞர்களின் வாழ்வாதாரங்களுக்கு வலுவான முக்கியத்துவத்துடன் நிகழ்த்து கலைகளை புதுப்பிப்பதில் கவனம் செலுத்துகின்றன. இதற்கு ஆதரவு மூலம் இது அடையப்படும்:
கைவினை அடிப்படையிலான வாழ்வாதார முயற்சிகள்இந்த புதிய துணை கருப்பொருளின் மூலம், கைவினைப்பொருட்களையும், கைவினை சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்வதை அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டுள்ளது. அறக்கட்டளைகள் இந்த முயற்சிகளை ஆதரிக்கின்றன
பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல்இந்த துணைக் கருப்பொருளின் கீழ், அறக்கட்டளை முதன்மையாக தேசிய கலைப் பொக்கிசங்களைப் பாதுகாப்பதற்கான உத்திகளை வகுக்கும் திட்டங்களை ஆதரிக்கிறது. மேலும், பொது பயன்பாட்டையும், ஆபத்தான கலாச்சார பாரம்பரியத்திற்கான அணுகலையும் மேம்படுத்துகிறது. சமூக ஊடகங்களும், வாழ்வாதாரங்களும்சமூகங்களின் வாழ்க்கைத் தரத்திற்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் மதிப்பு சேர்க்கும் திறன் கொண்ட சமூக அடிப்படையிலான ஊடகத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறது. சொத்துகளுக்கான மானியங்கள்சமுதாயத்தில் நேர்மறையான மாற்றத்தை பாதிக்கும் பணி சார்ந்த நிறுவனங்களைத் தக்கவைக்க அறக்கட்டளை சொத்துகளை உருவாக்கி பயன்படுத்தியுள்ளது. இது நன்கு நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுடனும், தெளிவாக வரையறுக்கப்பட்ட அளவுகோல்களுடன் முறையான சொத்து மூலதனத்தைக் கொண்டுள்ளது. இது தகுதியான நிறுவனங்களை அடையாளம் காணவும் மதிப்பீடு செய்யவும் உதவுகிறது. இந்தத் திட்டம் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது: மேம்பாட்டு நடவடிக்கைக்கான நிபுணத்துவ உதவி (புது தில்லி), தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு (புது தில்லி). குழந்தைகள் நிவாரணமும், நீங்களும் ( மும்பை ), அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (புது தில்லி) , குழந்தைகள் புத்தக அறக்கட்டளை (புது தில்லி). [6] அவசர மானியங்கள்இந்தியாவில் 2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்றுகோ நோயை எதிர்த்துப் போராடுவதற்காக டாடா சன்ஸ் நிறுவனமும், இரத்தன் டாடா அறக்கட்டளையும் பிரதமர் கவனிப்பு நிதியத்திற்கு, ₹ 1,500 கோடியை நன்கொடையாக அளித்தனர். [7] சிறிய மானியங்கள்சர் ரத்தன் டாடா சிறுநிதித் திட்டம் (எஸ்ஜிபி) 1998-99 இல் தொடங்கப்பட்டது. இவை சிறிய, பொதுநலன் சார்ந்த அமைப்புகளின் தேவைகளையும், புதுமையான யோசனைகளைச் செயல்படுத்த ஆதரவு தேவைப்படுபவர்களையும் பூர்த்தி செய்கின்றன. மூலோபாய திட்டமிடல், கவனம் செலுத்திய ஆராய்ச்சி நடவடிக்கைகள் அல்லது உள் அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு நிதி தேவைப்படும் தகுதியான பெரிய நிறுவனங்களுக்கு இடமளிக்கும் வகையில் இது பின்னர் திருத்தப்பட்டது. [8] [9] தனிப்பட்ட மானியங்கள்அறக்கட்டளையின் தனிப்பட்ட மானிய திட்டம் இதற்கான நிதி உதவியை வழங்குகிறது:
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia