சிங்க வரிசைசிங்க வரிசை என்பது இந்திய ரிசர்வ் வங்கி முதன் முதலாக வெளியிட்ட பணத்தாள் வரிசையாகும். பிரித்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற பிறகு சுதந்திர இந்தியா இந்தப் பணத்தாள் வரிசையை வெளியிட்டது. அதன் பிறகு மகாத்மா காந்தி வரிசை வெளியிடும் வரை இந்த சிங்க வரிசை புழக்கத்தில் இருந்தது. முதன் முதலாக இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு ரூபாய் பணத்தாள் அச்சிடப்பட்டது.[1][2] சிங்க இலட்சனைசுதந்திர இந்திய அரசாங்கம் தன்னுடைய இலட்சனையாக நான்கு சிங்கங்கள் உள்ள அசோகரின் தூணை ஏற்றுக்கொண்டது. அந்த தூணில் நான்கு சிங்கங்கள் நான்கு திசையை நோக்கியவாறு அமைந்திருக்கும். சின்னத்தில் நடுநிலையாக ஒரு சிங்கம் நேராக பார்க்கும்படியும், மற்ற இரு சிங்கங்கள் அதன் இரு புறமும் வேறு திசையை நோக்கியவாறும் அமைந்திருக்கும். நான்காவது சிங்கம் பின்புறமாக இருப்பதால் இலட்சனையில் அச்சிங்கம் தெரியாது. இந்த சிங்க அமைப்பின் கீழே அசோக சக்கரமும், சக்கரத்தின் வலது புறம் ஓடும் குதிரையும், இடதுபுறம் ஓடும் காளையும் அமைந்திருக்கும். காட்சியகம்
இவற்றையும் காண்கஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia