சிட்டி பாபு (வீணைக் கலைஞர்)வீணை சிட்டிபாபு என அறியப்பட்ட சிட்டி பாபு (அக்டோபர் 13, 1936 – பிப்ரவரி 9, 1996) தென்னிந்தியாவைச் சேர்ந்த வீணைக் கலைஞராவார். பிறப்பும், இசைப் பயிற்சியும்ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த சிட்டிபாபுவின் இயற்பெயர் ஹனுமானுலு என்பதாகும். ஈமனி சங்கர சாஸ்திரி என்பவரிடம் வீணைப் பயிற்சி பெற்றார். தனது தந்தை செல்லப்பள்ளி ரங்காராவ் ஒருமுறை வீணை வாசித்துக் கொண்டிருந்தபோது, தவறொன்றை 5 வயது சிறுவன் சிட்டி பாபு சுட்டிக்காட்டினார். இசை வாழ்க்கைதிரைப்படத் துறைப் பங்களிப்புகள்திரைப்பட இசைக்குழுக்களில் வீணை வாசித்துள்ளார். சம்பூர்ண இராமாயணம் திரைப்படத்தில் இராவணன் வாசிப்பதாக அமைக்கப்பட்ட 'சங்கீத சௌபாக்கியமே' எனும் பாடலில் வீணை வாசித்தவர் இவரே. தேசிய விருது பெற்ற திக்கற்ற பார்வதி எனும் திரைப்படத்தின் இசையமைப்பாளர் சிட்டிபாபு ஆவார். மேடைக் கச்சேரிகள்இவரது கச்சேரிகளில் இடம்பெறும் கதனகுதூகலம், குக்குக் பாட்டு போன்றவை நேயர்களிடம் வரவேற்பைப் பெற்றன. பெற்ற விருதுகள்
குடும்பம்இவரின் மனைவி, சுதந்திரப் போராட்ட வீரர் பட்டாபி சீத்தாராமய்யாவின் பேத்தியாவார். சிட்டிபாபுவின் மகன் சுந்தர் சி. பாபு பிரபல திரைப்பட இசையமைப்பாளர். மறைவுபிப்ரவரி 9, 1996 அன்று மாரடைப்பின் காரணமாக தனது 59 ஆவது வயதில் காலமானார். மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia