சிந்தகாயலா அய்யண்ணா பட்ருடு
சிந்தகாயலா அய்யன்னா பட்ருடு (Chintakayala Ayyanna Patrudu) (பிறப்பு 4 செப்டம்பர் 1957) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். நர்சிப்பட்டினம் தொகுதியில் இருந்து ஆந்திர பிரதேச சட்டமன்றத்திற்கு பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] ஆரம்ப கால வாழ்க்கைஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நர்சிப்பட்டினத்தில் கொப்புல வெலமா குடும்பத்தில் [2] [3] பிறந்தார். 1978 இல் காக்கிநாடாவிலுள்ள அரசுக் கல்லூரியில் கலைப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அரசியல் வாழ்க்கைதெலுங்கு தேசம் கட்சியில் உறுப்பினராக இருந்து அரசியலை தொடங்கினார். பின்னர், விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நர்சிப்பட்டினம் தொகுதியில் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். 1983-88, 1994-96, 1999-2009 மற்றும் 2014 ஆகிய ஆறு முறை தெலுங்கு தேசம் கட்சி சார்பில், அதே தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-98ல் அனகப்பள்ளி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989-93, 2009 மற்றும் 2019 இல் அனகப்பள்ளி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார், மேலும் இவர் 2014-19 வரை ஆந்திர பிரதேச அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றினார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia