சிவகந்தவர்மன்
சிவகந்தவர்மன் என்பவன் முற்காலப் பல்லவர் மன்னர்களுள் அறியப்படும் இரண்டாம் பல்லவ மன்னனாவான். முற்காலப்பல்லவர்களில் முதலாமானவனின் பெயர் தெரியவில்லை.[1] அவனுடைய மகனே இந்த சிவகந்தவர்மன். இவனின் பெயர் முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட பிராகிருத மொழியில் காணப்படுகிறது. பாரத்வாச கோத்திரம்இவன் தன்னையும் தன் முன்னோரையும் பாரத்துவாசர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டான். இவன் இளவரசனாக பதவியேற்று பத்தாம் வருடத்தில் விரிபரம் என்னும் சிற்றூரை இரண்டு பிராமணர்களுக்கு தானம் கொடுத்தவன். இதற்கான பட்டயச்சான்றும் உளது.[2] அதன்படி இப்பட்டயத்தை காஞ்சியில் வெளியிட்டான். அதை ஆந்திர நாட்டின் பல்லவர் பகுதியை ஆண்ட சிற்றரசனுக்கு அனுப்பியுள்ளான். அரசர்கெல்லாம் அரசன்இவன் வெளியிட்ட மற்றொரு பட்டயம் ஒன்றில் இவன் மகாராசாதிராசன் எனவும் அசுவமேதம், அக்னிட்ட ஓமம், வாஜபேயம் போன்ற யாகங்களை செய்தவன் என்று குறிப்பிடப்படுகிறான். ஹிரதவல்லி என்ற தெலுங்கு நாட்டைச் சேர்ந்த ஊரில் வெளியிடப்பட்ட இப்பட்டயத்தில் தன் தந்தையான பப்பதேவன் எனக் குறிப்பிடப்படும் பெயர் தெரியாத பல்லவ அரசனன் சில்லரேகக் கொடுங்கா என்னும் ஊரை சிலருக்கு தானம் கொடுத்ததை உறுதிப்படுத்தக் கொடுத்ததாக உள்ளது. இது இவன் எட்டாம் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டது.[3]
சாதவாகண ராட்டிர வெற்றிஇவன் காலத்தில் சாதவாகணர் ஆண்ட பகுதிகளை இக்குவாகர் மற்றும் பிருகத்பலாயணர் என்னும் மன்னர்கள் அடுத்தடுத்து ஆண்டனர். அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல்லவர்கள் அந்நாட்டின் தெற்கு மாகாணத்தை ஆண்டனர். பல்லவர்கள் இவர்கள் இருவரையும் தோற்கடித்தனர். இவனது காலத்திலே இது நடந்ததைக் கொண்டும் இவன் தன் கீழடங்கிய ஆந்திர சிற்றரசனுக்கு ஆணைப் பட்டயம் வழங்கியதைக் கொண்டும் இவனே இக்குவாகரையும் பிருகத்பலாயணரையும் வெற்றி கொண்டான் என்பது தெளிவு.[6] காலம்மூலம் - சர்கார் என்பவர் வெளியிட்ட நூல்[7]
மூல நூல்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia