சிவதருமோத்தரம்சிவதருமோத்தரம் என்னும் நூல் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் என்னும் சைவப் பெரியாரால் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று. அகத்தியர் வினாக்களுக்கு முருகக்கடவுள் சொல்லும் விடைகளைக் கூறுவதாக அமைந்துள்ளது இந்த நூல். வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்யும்போது ஆசிரியர் இந்நூலில் தமிழரின் சிவாகமக் கோட்பாடுகளையும் புகுத்தியுள்ளார். குருஞான சம்பந்தர் இதன் கருத்துக்களை மறுத்து எழுதியுள்ளார். குருஞான சம்பந்தருக்கு 150 ஆண்டுகள் பின்னர் வாழ்ந்த வெள்ளியம்பலவாணத் தம்பிரான், குருஞான சம்பந்தரின் மறுப்பு நூலுக்குச் சிற்றுரையும், பேருரையும் எழுதியதோடு, மறைஞான சம்பந்தருடைய சிவதருமோத்தரம் முதலான நூல்களைப் போற்றியும் எழுதியுள்ளார். இது பாயிரம் மற்றும் 12 இயல்களில் 1224 செய்யுள் கொண்டது. முருகன் சொன்ன 12,000 விடைகளுள் 1,800 விடைகள் இவை என்று சொல்லிக்கொண்டு நூல் வளர்கிறது. இதன் இயல்கள் சொல்லும் செய்திகள் வருமாறு:
பாடல்இந்நூலில் அமைந்துள்ள பாடல் ஒன்று நரகத்தில் தண்டிப்போர், துன்புறுத்தும்போது இவ்வாறு சொல்லிக்கொண்டு துன்புறுத்துவார்கள் என்கிறது:
கருவிநூல்
அடிக்குறிப்பு |
Portal di Ensiklopedia Dunia