சிவப்பிரகாசம் (நூல்)சிவப்பிரகாசம் என்பது 14 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகும். 14 சைவ சித்தாந்த சாத்திர நூல்களுள் எட்டு நூல்களை இயற்றிய உமாபதி சிவாச்சாரியாரே இதன் ஆசிரியராவார். இந் நூல் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை நூறு விருத்தப் பாடல்களால் விளக்குகின்றது. இந்த நூலுக்கு முதல்நூல் சிவஞான போதம். வழிநூல் சிவஞான சித்தி. இது சார்புநூல். இந்நூல் எழுதப்பட்ட ஆண்டு சாலிவாகனம் 1228 (பொஊ 1306).[1] வடமொழி உபநிடதக் கருத்துக்களை இந்த நூல் தெளிவாக்குகிறது. இந்த நூலுக்குப் பல உரைநூல்கள் உள்ளன. அவை:திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மதுரை ஞானப்பிரகாசர் உரை (அச்சாகவில்லை),திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மதுரை சிவப்பிரகாசர் பேருரை, சிதம்பரநாத முனிவர் உரை, நல்லசிவதேவர் சிந்தனையுரை, அருள்நந்திதேவர் உரை (அச்சாகவில்லை), திருவுருமாமலை அடிகள் உரை, திருவிளக்கம் புத்துரை, மற்றும் பழைய உரைகள் சில.
தொன்மையாம் எனும் எவையும் நன்றாகா; இன்று
நன்மையினார் நலங்கொள்மணி பொதியும் அதன் களங்கம்
தன்மையினார் பழமை அழகு ஆராய்ந்து தரிப்பார்;
இன்மையினார் பலர் புகழில் ஏத்துவர் ஏதிலர் உற்று
இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia