டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் |
---|
 |
பிறப்பு | (1933-01-19)சனவரி 19, 1933 சீர்காழி , தஞ்சாவூர் மாவட்டம் , தமிழ் நாடு. |
---|
இறப்பு | மார்ச்சு 24, 1988(1988-03-24) (அகவை 55) |
---|
தேசியம் | இந்தியர் |
---|
படித்த கல்வி நிறுவனங்கள் | வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி, சென்னை இசைக்கல்லூரி |
---|
பணி | வாய்ப்பாட்டு |
---|
செயற்பாட்டுக் காலம் | 1952-1988 |
---|
அறியப்படுவது | இசை |
---|
பெற்றோர்(கள்) | சிவசிதம்பரம் அவையாம்பாள் |
---|
சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (Sirkazhi Govindarajan, 19 சனவரி 1933 – 24 மார்ச்சு 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
பெயர் : சி. கோவிந்தராசன்
பிறப்பு: 19 ஜனவரி 1933
இறப்பு: 24 மார்ச் 1988.
பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்
பிறப்பிடம்: சீர்காழி , தஞ்சாவூர் மாவட்டம்.
ஆரம்பக் கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி
இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில:
- தியானமே எனது - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
- வதனமே சந்திர பிம்பமோ - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
- செந்தாமரை முகமே - பி. யூ. சின்னப்பா பாடிய பாடல்
- கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல்
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி
இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி
இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்
பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம்
திரைப்படப் பாடகர்
திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
திரைப்படத்துக்காக பாடிய பாடல்கள்
(பட்டியல் முழுமையானதன்று)
எண்
|
பாடல்
|
பாடலாசிரியர்
|
இசையமைப்பாளர்
|
பாடல் இடம்பெற்ற திரைப்படம்
|
1
|
பட்டணந்தான் போகலாமடி ...
|
|
எம்.வேணு
|
எங்க வீட்டு மகாலெட்சுமி
|
2
|
அமுதும் தேனும் எதற்கு ...
|
|
கே. வி. மகாதேவன்
|
தை பிறந்தால் வழி பிறக்கும்
|
3
|
மாட்டுக்கார வேலா ...
|
|
கே. வி. மகாதேவன்
|
வண்ணக்கிளி
|
4
|
வில் எங்கே கணை இங்கே ...
|
|
எம். எஸ். விஸ்வநாதன், இராமமூர்த்தி
|
மாலையிட்ட மங்கை
|
5
|
வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே ...
|
|
ஜி.இராமநாதன்
|
கோமதியின் காதலன்
|
6
|
கொங்கு நாட்டுச் செங்கரும்பே ...
|
மாயவநாதன்
|
ஜி. இராமநாதன்
|
கோமதியின் காதலன்
|
7
|
மலையே என் நிலையே ...
|
|
ஜி. இராமநாதன்
|
வணங்காமுடி
|
8
|
ஜக்கம்மா ...
|
|
ஜி.இராமநாதன்
|
வீரபாண்டிய கட்டபொம்மன்
|
9
|
பட்டணந்தான் போகலாமடி ...
|
|
எம்.வேணு
|
எங்க வீட்டு மகாலெட்சுமி
|
10
|
ஒற்றுமையாய் வாழ்வதாலே ...
|
|
கே. வி. மகாதேவன்
|
பாகப்பிரிவினை
|
11
|
எங்கிருந்தோ வந்தான் ...
|
பாரதியார்
|
கே. வி. மகாதேவன்
|
படிக்காத மேதை
|
12
|
ஓடம் நதியினிலே ...
|
|
|
காத்திருந்த கண்கள்
|
13
|
கோட்டையிலே ஒரு ஆலமரம் ...
|
|
|
முரடன் முத்து
|
14
|
நல்ல மனைவி நல்ல பிள்ளை ...
|
|
|
நம்ம வீட்டு லட்சுமி
|
15
|
பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா ...
|
|
|
அக்கா தங்கை
|
16
|
கண்ணான கண்மணிக்கு அவசரமா ...
|
|
|
ஆலயமணி
|
17
|
கண்ணன் வந்தான் ...
|
|
|
ராமு
|
18
|
தேவன் கோவில் மணியோசை
|
கண்ணதாசன்
|
விஸ்வநாதன்-ராமமூர்த்தி
|
மணி ஓசை
|
பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில
- பட்டணந்தான் போகலாமடி - படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
- மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை
- காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை
- ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு)
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்
சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான அனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.
- நிலவோடு வான்முகில், இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)
- எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)
- உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)
- வண்டு ஆடாத சோலையில் , ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)
- சிரிப்பது சிலபேர், யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)
- ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்) - ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
- யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)
- ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
பிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்
- கண்ணன் வந்தான் (படம்: ராமு)(உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
- தேவன் வந்தான் (படம்: குழந்தைக்காக) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்)
- வெள்ளிப் பனிமலையின் (படம்: கப்பலோட்டிய தமிழன்) (உடன் பாடியவர்: திருச்சி லோகநாதன்)
- இரவு நடக்கின்றது (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
- ஆயிரம் கரங்கள் நீட்டி (படம்: கர்ணன்) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)
விருதுகள்
மேற்கோள்கள்
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 15 June 2024.
உசாத்துணை
வெளி இணைப்புகள்