சுத்தி இயக்கம்தூய்மைப்படுத்தும் சடங்கு அல்லது சுத்தி இயக்கம் (Shuddhi) 1920-இல் பிரித்தானிய இந்தியாவில் இந்து சமயத்திலிருந்து பிற சமயகளுக்கு மாறியவர்களை மீண்டும் இந்து சமயத்திற்குள் சேர்த்து கொள்வதற்கு செய்யப்படும் சமயச் சடங்கு ஆகும். வட இந்தியாவில் 1920களில் இத்தூய்மைப்படுத்தும் சடங்கினை துவக்கியவர் தயானந்த சரசுவதி ஆவார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் சீடரான சுவாமி சிரத்தானந்தர்[1] 1920களில் சுத்தி இயக்கம் எனும் பெயரில் இப்பணியை பஞ்சாப் பகுதியில் செய்தார். இதனால் சுவாமி சிரத்தானந்தர், இசுலாமிய கடும்போக்குவாதியான ஒரு முஸ்லீமால் கொல்லப்பட்டார். சுத்தி இயக்கம்சமூக-பொருளாதார இயக்கமான சுத்தி இயக்கம் பண்டைய இந்து சமயச் சடங்கிலிருந்து தோன்றியதாகும்.[2] சுத்தி இயக்கத்தை ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரசுவதி சுத்தி இயக்கத்தை முதலில் தொடங்கினார்.[3] பின்னர் தயானந்த சரசுவதியின் சீடர்களில் ஒருவரான சுவாமி சிரத்தானந்தர் 1920களில் வட இந்தியாவில் பஞ்சாப் பகுதிகளில் சுத்தி இயக்கம் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த இயக்கம் இந்தியா முழுவதும் பரவியது. [3] சுத்தி இயக்கம் பகுத்தறிவு அடிப்படையில் சமூக சீர்திருத்தப் பணியை நோக்கமாகக் கொன்டு, இந்து சமயத்தில் தீண்டாமையை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டிருந்தது. சுத்தி இயக்கம், இசுலாம் போன்ற பிற சமயங்க்ளுக்கு மாறியவர்களை மீண்டும் இந்து சமயத்திற்குள் கொண்டு வருவதற்கும், தீண்டாமை ஒழிப்பு மூலம் மற்ற மதங்களில் இருந்து இந்து மதத்திற்கு வருபவர்களின் நிலையை உயர்த்துவதன் மூலம் அவர்களை சமூகத்தில் ஒருங்கிணைப்பதன் மூலமும், தன்னம்பிக்கையையும் சுயநிர்ணயத்தையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.[3][4][5] இந்த சமயத்தில் இந்து சமயத்தவர்களை இசுலாம் மற்றும் கிறிஸ்தவர்களாக மாற்றுவதை குறைக்க இந்த இயக்கம் பாடுபட்டது.[3] பிற சமயங்களை தழுவிய இந்து சமயத்தவர்களை மீண்டும் தாய் மதமான இந்து சமயத்தில் சேர்க்கும் பொருட்டு, சுவாமி சிரத்தானந்தர் 1923-இல் பாரதிய சுத்தி மகாசபையை நிறுவினார். இது இறுதியில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே ஒரு மோதல் போக்கு உருவாக்கியது. மகாத்மா காந்தி சுவாமி சிரத்தானந்தர் குறித்து 'இந்து-முஸ்லீம் மோதல்: காரணங்கள் மற்றும் எதிர்ப்பு' என்ற தலைப்பில் 1922 மே 29 யங் இந்தியா இதழில் ஒரு கருத்தை வெளியிட்டார்.
காந்தியின் கட்டுரைக்கு சிரத்தானந்தர் கீழ்கண்டவாறு பதில் அளித்தார்: "ஆரிய சமாஜம் தங்களுக்கு உண்மையாக இருந்தால், மகாத்மா காந்தி அல்லது வேறு எந்த நபரின் குற்றச்சாட்டுகள் மற்றும் படையெடுப்புகளும் ஆர்ய சமாஜின் போக்குகளை தடுக்க முடியாது." சிரத்தானந்தர் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி நகர்ந்தார். மேற்கு யுனைடெட் மாகாணத்தில் மல்கனா[6] இசுலாமிய ராஜபுத்திரர்களின் மறுசீரமைப்பே முக்கிய சர்ச்சையாக இருந்தது. [7] [4]மேலும் இயக்கத்தின் தலைவர் சுவாமி சிரத்தானந்தரின் கொலைக்கு வழிவகுத்தது. 1926-ஆம் ஆண்டில் சுவாமி சிரத்தானந்தர் ஒரு முஸ்லீம் இளைஞனால் கொல்லப்பட்டார்.[8] அவர் இறந்த பிறகும் இந்த இயக்கம் தன் இலக்கை நோக்கி தொடர்ந்தது. 1920 களின் பிற்பகுதியில், கொங்கண் பகுதியில் சதாரா மாவட்டத்தில் வாழ்ந்த கத்தோலிக்க பஞ்ச கவுட பிராமணர்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்க்க தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனால் கத்தோலிக்க பஞ்ச கவுடா பிராமணர்களில் கணிசமானவர்கள் மீண்டும் தாய் மதமான இந்து சமயத்திற்கு 23 பிப்ரவரி 1928 அன்று கோவாவில் உள்ள பல கத்தோலிக்க கவுடா பிராமணர்களின் திருச்சபை மற்றும் போர்த்துகீசிய அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி சுத்தி சடங்கு செய்து மாற்றப்பட்டனர்.[9] இந்து சமயத்திற்கு மாற்றப்பட்டவர்களுக்கு சமசுகிருத இந்து பெயர்கள் வழங்கப்பட்டன, ஆனால் கோவா போர்த்துகீசிய அரசாங்கம் அவர்களின் புதிய இந்து பெயர்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி பெற தடைகளை ஏற்படுத்தியது. [10] திஸ்வாடியிலிருந்து 4851 கத்தோலிக்க |பஞ்ச கவுடா பிராமணர்களும், போண்டாவிலிருந்து 2174, பிச்சோலிமில் இருந்து 250 மற்றும் சத்தாரியில் இருந்து 329 பேரும், சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர். இந்து மதத்திற்கு மாறியவர்களின் மொத்த எண்ணிக்கை 7815 ஆகும். [11] கத்தோலிக்க பிராமண முன்னோர்கள் சாதி தூய்மையைப் பேணாததால், தற்போதுள்ள இந்து கவுடா சமூகம் இந்த புதிய இந்துக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இந்த புதிய இந்துக்கள் தனிச் சமூகமாக வளர்ந்தனர், இப்போது அவை புதிய-இந்து கவுடர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இருப்பினும், வட இந்தியாவில் இந்த இயக்கம் பரேல்வி இயக்கத்தின் ஜமாத் ராசா-இ-முஸ்தபா போன்ற இஸ்லாமிய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது, இது பிரித்தானிய இந்தியாவில் முஸ்லிம்களை இந்து மதத்திற்கு மாற்றுவதற்கான சுத்தி இயக்கத்தின் முயற்சிகளை எதிர்கொள்ள முயன்றது. [12][13] இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia