சுவர்ணமுகி (திரைப்படம்)
சுவர்ணமுகி என்பது 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். கே. எஸ். அதியமான் இத்திரைப்படத்தினை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் தேவயானி, இராதாகிருஷ்ணன் பார்த்திபன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜெய்கணேஷ், மணிவண்ணன், மற்றும் பாத்திமா பாபு ஆகியோர் உடன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கே. சேது ராஜேஸ்வரன் இத்திரைப்படத்தினை தயாரித்திருந்தார். சுவரராஜ் இசையமைத்துள்ளார். 20 பிப்ரவரி 1998 இல் வெளிவந்தது.[1][2][3] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் சுமன், சங்கவி (நடிகை) மற்றும் சாய் குமார் ஆகியோர் நடிப்பில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[4] நடிகர்கள்
இசை
முக்கோணக் காதல் கதையம்சம் கொண்ட திரைப்படம். முன்னாள் காதலன் ஏமாற்றிவிட்டதாக எண்ணுகிறாள். ஆதலால், தன்னை விரும்பும் ஒருவனை இரண்டாவது காதலானாக கொள்கிறாள். அப்போது,முதல் காதலன் திரும்ப வந்து குறுக்கிடுகிறான். முடிவு என்ன என்பது கதையாகும்.[5] ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia