சுஸ்மேஷ் சந்திரோத்சுஸ்மேஷ் சந்திரோத் (ஆங்கிலம்: Susmesh Chandroth) என்ற இவர் 1977 ஏப்ரல் 1 அன்று பிறந்த இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாள மொழி எழுத்தாளர் ஆவார். இவர் இந்திய அரசின் சாகித்திய அகாதமியால் நிறுவப்பட்ட 'யுவ புரஸ்கார்' என்ற 35 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளருக்கு வழங்கப்படும் முதல் விருதை வென்றுள்ளார்.[1][2] இவர் எழுதிய மரண வித்தியாலயம் என்ற புதினங்களுக்காக பல விருதுகளை வெண்றுள்ளார். தொழில்கேரளாவின் முக்கிய பத்திரிகைகளில் கதைகள், புதினங்கள் மற்றும் கட்டுரைகள் போன்றவற்றை மலையாள மொழியில் எழுதுகிறார்.[3][4] இவரது முதல் புதினமான 'டி' என்பது கேரளாவின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான டி.சி புத்தக நிறுவனம் நிறுவிய புதினங்களுக்கான் கார்னிவல் பரிசை வென்றது. அவரது இரண்டாவது புதினமான '9' என்ற படைப்பு 2010 'அங்கனம் பரிசு' மற்றும் 'சாகித்யஸ்ரீ பரிசு' ஆகியவற்றை வென்றது.[5] கேரள சாகித்ய அகாதமியின் கீதா இரண்யன் நினைவு அறக்கட்டளை விருது, செருகாத் விருது, எடசேரி விருது, சி. வி. சிறீராமன் விருது, முண்டூர் கிருஷ்ணன் குட்டி விருது, அபுதாபி சக்தி விருது, கே. ஏ. கொடுங்கல்லூர் விருது, பேராசிரியர் வி. ரமேஷ்சந்திரன் விருது, ஜெசி அறக்கட்டளை பரிசு மற்றும் நூரானாத் ஹனீப் விருது போன்ற பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.[6] இவரது பல படைப்புகள் ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள் கேரளாவில் உள்ள பள்ளி மற்றும் பல்கலைக்கழக மட்டங்களில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. இவரது படைப்புகள் இந்தியா அரசின் சாகித்திய அகாதமி வெளியீடான 'இந்திய இலக்கியம்' எனற பத்திரிகையிலும் வெளிவந்துள்ளன.[7] 1998 ஆம் ஆண்டில், மலையாளத்தில் ‘பருவமழை முகாம்: ஒரு புதிய குறிக்கோள்’ என்ற ஆவணப்படத்த்தின் திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார். அதன் 20 வது ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக தர்சனா திரைப்பட சங்கம் நடத்திய திரைப்பட விழாவில் இது இரண்டாவது பரிசை வென்றது.[8] பிரதான மலையாள தொலைக்காட்சி ஒளியலை வரிசையான அமிர்தா தொலைக்காட்சியில் ‘ஹரித பாரதம்’ (பசுமை இந்தியா) என்ற தொடரின் 100 தனித்தனி அத்தியாயங்களுக்கு இவர் திரைக்கதை எழுதியுள்ளார்.[9] ஏசியானெட் செய்தி ஒளியலை வரிசை ஒளிபரப்பிய பயணக் குறிப்பான ‘வ்யூஃபைண்டர்’ என்பதில் இவரது எழுத்துகளும் இடம் பெற்றது. 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பக்கல்’ (நாள்) என்ற மலையாளத் திரைப்படத்திற்கும் இவர் திரைக்கதை எழுதியுள்ளார். மலையாள மொழியில் 2007 இல் இவரால் திரைக்கதை எழுதப்பட்ட குறும்படம் 'ஆசுபத்ரிகல் அவஷ்யப்புதுன்னா லோகம்’ என்பது (மருத்துவமனை கோரும் உலகம்) கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் சிறந்த திரைப்பட விருதை வென்றது. 2009 ல் கேரள அரசின் ஐந்து விருதுகளை வென்ற ‘ஆதிரா 10 சி’ என்ற குறும்படமும் இவரால் திரைக்கதை எழுதப்பட்டது.[10] இந்த குறும்படம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் சிறந்த திரைப்பட விருதைப் பகிர்ந்து கொண்டது. தேசிய விருது வென்ற பிரியானந்தனன் இயக்கிய 'மரிச்சவருடே கடல்' (இறந்தவர்களின் கடல்) என்ற குறும்படத்தின் திரைக்கதையையும் இவர் எழுதியுள்ளார்.[11] விருதுகள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia