செம்பருந்து
செம்பருந்து[2] (Brahminy Kite, Haliastur indus) செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய பருந்து. இந்து சமயப் புராணங்களில் திருமாலின் வாகனமாக வரும் செம்பருந்து ஒன்றைக் கருடன்[3] என்ற பெயரில் வணங்குவர். விவரிப்புஇவை இந்திய துணைக்கண்டம், தென் கிழக்காசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் சிறகின் விளிம்பு தனிப்பட்ட வெள்ளை நிறத்தில் காணப்படும். இது கரும்பருந்தின் நெருங்கிய உறவினர்.[4] இது சில சமயம் 5000 அடிக்கு மேலுள்ள இமயமலையிலும் காணப்படும்.[5] இதைப் போன்ற பருந்து வகைகள் இந்தியா, இலங்கை, பாக்கித்தான், வங்காளம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும்.சாவகத்தில் இந்த இனம் அழிந்து போய்விட்டது.[6] பெரும்பாலும் இப்பறவை இறந்த மீன்களை உணவாகக் கொள்வதால் கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் காணப்படும். சிறப்புகள்![]()
உசாத்துணை
மற்ற மூலங்கள்
மேற்கோள்
வெளி இணைப்புகள்![]() விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
|
Portal di Ensiklopedia Dunia