செவு கோயில், மத்திய சாவகம்![]() செவு கோயில் (Sewu) ( Javanese) இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் பிரம்பனானுக்கு வடக்கே 800 மீட்டர் தொலைவில், கிளாட்டன் ரீஜன்சியில் அமைந்துள்ள எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாயான பௌத்தக் கோயில் ஆகும். இது சைலேந்திர அல்லது மதர வம்சத்தைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்டிருக்கலாம். இந்தோனேசிய மொழியில் ஒரு இந்து அல்லது புத்த கோயிலை கண்டி என்பர் செவு கோயில் இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய புத்தர் கோயில் வளாகமாகும். போரோபுதூர் மிகப்பெரியது. செவு கோயில் பிரம்பானான் என்னுமிடத்தில் உள்ள லோரோ ஜொங்கிராங் கோயிலுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த கோயிலாகும். இந்த வளாகம் 249 கோயில்களைக் கொண்டிருந்தாலும், இந்த ஜாவானிய பெயர் 'ஆயிரம் கோயில்கள்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்தானது பிரபலமான உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளிலிருந்து ( தி லெஜண்ட் ஆஃப் லோரோ ஜொங்கிராங்க் ) உருவானதாகும். கோயில் வளாகத்தின் அசல் பெயர் மஞ்சுஸ்ரிகா என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். [1] வரலாறு1960 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கேலுராக் கல்வெட்டு (பொ.ச. 782 முதல் தேதியிட்டது) மற்றும் மஞ்சுஸ்ரிகிரா கல்வெட்டு (கி.பி 792 முதல் தேதியிட்டது), [2] :89 ஆகியவற்றின் படி, இந்தக் கோயில் அமைந்துள்ள வளாகத்தின் அசல் பெயர் அநேகமாக "மஞ்சுஸ்ரி கிரா" (தி ஹவுஸ் ஆஃப் மஞ்சுஸ்ரி) என்றிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. [3] மஞ்சுஸ்ரி என்பது மகாயான பௌத்த போதனைகளிலிருந்து வந்த ஒரு போதிசத்துவமாகும். இது ஆழ்ந்த ஞானத்தின் "மென்மையான மகிமையை" குறிக்கிறது. (சமஸ்கிருதம்: பிரஜா ). ராகை பனங்ககரனின் ஆட்சியின் முடிவில் எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இக் கோயில் கட்டப்பட்டது. அவரது வாரிசான மன்னர் இந்திரனின் ஆட்சிக் காலத்தில் கட்டடப்பணி நிறைவு பெற்றது. ராகாய் பனங்கரன் (பொ.ச. 746–780) மேதாங் மாதரம் இராச்சியத்தை ஆண்ட பக்தியுள்ள மகாயான புத்த மன்னராக நன்கு அறியப்பட்டவர் ஆவார். மஞ்சுஸ்ரியா கோயில் பிரம்பனன் சமவெளியில் அமைந்துள்ள பெரிய புத்தர் கோயில் ஆகும். பிராந்தியம் பிரம்பானான் கோயிலுக்கு 70 ஆண்டுகளுக்கும் முந்தைய கோயிலாகும். போரோபுதூரில் உள்ள கோயிலுக்கு 37 ஆண்டுகளுக்கு முந்தையது. மாதரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில், ராஜ்யத்தின் அரச பௌத்தக் கோயிலாகச் செயல்பட்டு வந்தது. நிலையான மத விழாக்கள் இங்கு தவறாமல் நடத்தப்பட்டு வந்தன. இந்த கோயிலின் பிரசாதா என அழைக்கப்படுகின்ற கோபுரத்தின் அழகை மஞ்சுஸ்ரிகா கல்வெட்டு (792) சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. பல நூறு மீட்டர் தெற்கே அமைந்துள்ள புப்ரா கோயிலும், செவு கோயிலுக்கு கிழக்கே அமைந்துள்ள கானா கோயிலும், மஞ்சுஸ்ரியா வளாகத்திற்கான பாதுகாவலர் கோயில்களாக பணியாற்றியிருக்கலாம், இது செவு கோயிலைச் சுற்றியுள்ள நான்கு கார்டினல் திசைகளில் அவ்வாறாக அமைந்திருக்கலாம்.சேவுவின் வடக்கே உள்ள லோர் கோயிலின் இடிபாடுகள் மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள குலோன் கோயில் ஆகிய இரண்டும் மோசமான நிலையில் உள்ளன. அந்த தளங்களில் சில கற்கள் மட்டுமே காணப்படுகின்றன. போரோபுதூர் மற்றும் பிரம்பானான் கட்டப்படுவதற்கு முன்பாக, செவு இராச்சியத்தின் முதன்மைக் கோயிலாக இக்கோயில் இருந்திருக்கலாம். பௌத்த அண்டவியலில் பிரபஞ்சத்தை அடையாளப்படுத்தும் மண்டலா [4] அமைப்பில் இக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக் கோயில் ராகைபிகாடன் ஆட்சிக்காலத்தின்போது கட்டப்பட்டிருக்கலாம் அல்லது விரிவுபடுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ராகைபிகாடன், சைலேந்திர வம்சத்தினைச் சேர்ந்த ஒரு புத்த இளவரசியான பிரமோதவர்தனி[5] என்பவரை திருமணம் செய்தவர் ஆவார். அவரது வம்சத்தைச் சேர்ந்தjபெரும்பாலான குடிமக்கள் நீதிமன்றம் இந்து மதத்திற்கு ஆதரவாக அமைந்ததும், தங்கள் பழைய மதங்களைத் தக்க வைத்துக் கொண்டனர். கோயில் வளாகத்தின் கட்டட அமைப்பானது பிரம்பானான் கோயிலைப் போலவே இருப்பதால் இந்து மற்றும் பௌத்த சமூகத்தினர் இங்கு இணக்கமாக வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. இக்கோயில் கெவு சமளியில் அமைந்துள்ளது. மறுகண்டுபிடிப்பு![]() மெராபி மலையைச் சுற்றியுள்ள எரிமலையின் சாம்பல்களுக்குஅடியில் ஆழமாக புதைக்கப்பட்டிருந்தாலும், கோயில் இடிபாடுகள் உள்ளூர் ஜாவானிய மக்களால் முழுமையாக மறக்கப்படவில்லை. இருப்பினும், கோயிலின் தோற்றம் குறித்து ஒரு மர்மம் நிலவுகிறது. பல நூற்றாண்டுகளாக, ராட்சதர்களின் புராணங்களும், சபிக்கப்பட்ட இளவரசியும் நிறைந்த கதைகள் மற்றும் புனைவுகள் கிராமவாசிகளால் பேசப்பட்டு வருகின்றன. பிரம்பனனும் செவுவும் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்களாக கருதப்டுகின்றனர். இருந்தனர், மேலும் லோரோ ஜொங்கிராங்கின் புராணக்கதையில் அவர்கள் பண்டுங் பொன்டோவோசோவின் உத்தரவின் கீழ் ஏராளமான பேய்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஜாவா போருக்கு (1825-1830) பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கோயில்கள் பாதுகாத்து வந்தமைக்கு இவ்வாறான கதைகளே பெரும்பாலும் காரணமாகின்றன. இடிபாடுகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளால் பார்க்கப்படுகின்றன என்று கருதி உள்ளூர் கிராமவாசிகள் கோவில் கற்கள் எதையும் அகற்றத் துணியவில்லை. ![]() கோயில் வளாகம்![]() ![]() செவு கோயில் வளாகம் பிரம்பானன் பகுதியில் மிகப்பெரிய பௌத்த வளாகம் ஆகும். செவ்வக வடிவ மைதானம் 185 மீட்டர் வடக்கு-தெற்கு மற்றும் 165 மீட்டர் கிழக்கு-மேற்கு அளவைக் கொண்டு அமைந்துள்ளது. நான்கு கார்டினல் புள்ளிகளிலும் ஒரு நுழைவாயில் உள்ளது, ஆனால் முதன்மை நுழைவாயில் கிழக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. நுழைவாயில்கள் ஒவ்வொன்றும் இரட்டை துவாரபால சிலைகளால் பாதுகாக்கப்படுகின்றன. இந்த பெரிய பாதுகாவலர் சிலைகள் சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளன, மேலும் இவற்றின் பிரதிகளை ஜோக்ஜா க்ராட்டனில் காணலாம் . இந்த வளாகத்தில் 249 கட்டிடங்கள் முதன்மை மைய மண்டபத்தை சுற்றி மண்டலா வடிவத்தில் அமைந்துள்ளன. இந்த உள்ளமைவு பிரபஞ்சத்தின் மகாயான பௌத்த தத்துவத்தை பெர்வாரா (பாதுகாவலர்) கோயில்கள் என அழைக்கப்படும் 240 சிறிய கோயில்கள் உள்ளன., இதேபோன்ற வடிவமைப்புகள் நான்கு செவ்வக செறிவு வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு வெளிப்புற வரிசைகள் நெருக்கமாக உள்ளன. அவற்றில் 168 சிறிய கோயில்கள் உள்ளன. அதே நேரத்தில் இரண்டு உள் வரிசைகள், குறிப்பிட்ட இடைவெளியில் 72 கோயில்களைக் கொண்டு அமைந்துள்ளது. இரண்டாவது சுற்று அல்லது வளாகத்தில் அமைந்துள்ள 249 கோயில்கள் அனைத்தும் ஒரு சதுர சட்டத்தால் செய்யப்பட்டன, ஆனால் அங்கு வெவ்வேறு வகையிலான சிலைகள் மற்றும் அமைப்புகள் உள்ளன. அவற்றுள் பல சிலைகளை இப்போது காணமுடியவில்லை. தற்போதைய தள அமைப்பு முந்தைய மூலக்கோயில் பாணியில் இல்லை.இங்குள்ள சிலைகள் போரோபுதூரின் சிலைகளுடன் ஒப்பிடத்தக்கவையாக உள்ளன. அவை பெரும்பாலும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. [6] ![]() முதன்மைக் கோயில்முதன்மைக் கோயில் 29 மீட்டர் விட்டம் கொண்டது. கோயிலின் உயரம் 30 மீட்டர் ஆகும். முதன்மைக்கோயிலின் தரைத் திட்டம் குறுக்கு வடிவத்தில் 20 பக்க பலகோண அமைப்பைக்கொண்டுள்ளது. முதன்மைக் கோயிலின் நான்கு கார்டினல் புள்ளிகளில் ஒவ்வொன்றிலும், நான்கு கட்டமைப்புகள் வெளிப்புறமாக திட்டமிடப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் அதன் சொந்த படிக்கட்டுகள், நுழைவாயில்கள் மற்றும் அறைகள், ஸ்தூபங்களால் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளன. அவற்றில் குறுக்கு போன்ற அமைப்பு உள்ளது.. கட்டட மைப்புகள் அனைத்தும் ஆண்டிசைட் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டவையாகும். முதன்மைக் கோவிலில் ஐந்து அறைகள் உள்ளன. மையத்தில் ஒரு பெரிய கர்ப்பக்கிருகம் எனப்படுகின்ற கருவறை உள்ளது. ஒவ்வொரு கார்டினல் திசையிலும் நான்கு சிறிய அறைகள் உள்ளன. இந்த நான்கு அறைகள் அனைத்தும் வெளிப்புற மூலையில் உள்ள காட்சியகங்களுடன் சிறிய ஸ்தூபங்களின் வரிசைகளால் எல்லைக்குட்பட்ட வெளியே நீட்டிக்கொண்டுள்ள வகையில் அமைந்துள்ளன. கிழக்கு அறையிலிருந்து மத்திய அறையை அடையலாம். மத்திய அறை மற்ற அறைகளை விட பெரியதாக உள்ளது. அது உயரமான கூரை கொண்டது. தற்போது ஐந்து அறைகளும் காலியாக உள்ளன. [7] இருப்பினும், மத்திய அறையில் தாமரை செதுக்கப்பட்ட கல் பீடம் கோயிலில் ஒரு காலத்தில் ஒரு பெரிய வெண்கல புத்தர் சிலை (பெரும்பாலும் மஞ்சுஸ்ரியின் வெண்கல சிலை) இருந்திருக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் உயரம் தோராயமாக நான்கு மீட்டர் இருந்திருக்கலாம். குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia