செ. யோகராசா
செ. யோகராசா (17 திசம்பர் 1949 – 7 திசம்பர் 2023) இலங்கையைச் சேர்ந்த மொழித்துறைப் பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். தமிழ் இலக்கியத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கருணையோகன் என்ற புனைபெயரில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளார்.[1] வாழ்க்கைக் குறிப்புயோகராசா 1949 திசம்பர் 17 இல் யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சி, கரணவாய் என்னும் ஊரில் செல்லையா, இலட்சுமி ஆகியோருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கரணவாய் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை நெல்லியடி, மத்திய மகா வித்தியாலயத்திலும் பயின்று, பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1971 இல் தமிழில் இளங்கலை சிறப்புப் பட்டத்தையும், 1972 இல் இளமெய்யியல் பட்டமும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1984 இல் கல்வி திப்புளோமா பட்டத்தையும், 1990 இல் முதுகலைப் பட்டத்தையும், 1999-இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[2] தொழில்1972 முதல் பல்வேறு இடங்களில் அஞ்சலக முகாமையாளராகப் பணியாற்றிய யோகராசா 1976-இல் ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.[2] 1991 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் விரிவுரையாளராக இணைந்து, 2009 இல் பேராசிரியரானார்.[2] நவீன தமிழ் இலக்கியம், தமிழியல் ஆய்வு, ஈழத்து இலக்கியம், சிறுவர் இலக்கியம், பெண்கள் இலக்கியம், நாட்டாரியல், கல்வி உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். விருதுகள்எழுதிய நூல்கள்
தொகுப்பு நூல்கள்
இறப்பு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia