சௌந்தர்யா பால நந்தகுமார்
சௌந்தர்யா பால நந்தகுமார் (Soundarya Bala Nandakumar) ஓர் இந்திய பாடகியும், நடிகையுமாவார். இவர் பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடரில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தொழில்2010ஆம் ஆண்டில், சௌந்தர்யா சூப்பர் சிங்கர் 3இல் போட்டியாளராகத் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.[1][2] 6 மெழுகுவத்திகள் (2013) என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.[3] 2015ஆம் ஆண்டில் ஒளிப்பரப்பப்பான பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடரில் முன்னணி நடிகைகளில் ஒருவராக அறிமுகமானார். தொடரின் தயாரிப்பாளர்கள் சூப்பர் சிங்கரில் இவரது நடிப்பைக் கண்டனர். இந்தத் தொடரில் ரேவதி என்ற பாத்திரத்திற்காக இவர் பாராட்டுகளைப் பெற்றார். இது கிட்டத்தட்ட 700 அத்தியாயங்கள் ஒளிப்பரப்பப்பட்டது.[1][2][4][5][6] 2016ஆம் ஆண்டில், இவர் சூப்பர் சிங்கர் 5 மினி தொடரில் பங்கேற்றார்.[7] சௌந்தர்யா கபாலி (2016) படத்தில் இடம்பெற்ற "அவதாரம் படத்தில் இடம் பெற்ற "தென்றல் வந்து" என்ற பாடலை பாடினார். இவர் முன்பு இந்தப் பாடலை சூப்பர் சிங்கரில் பாடியிருந்தார்.[8] இவரது அடுத்த பாடல் கொடிவீரனில் "களவாணி" என்ற பாடலாகும். இப்படலை இவர் விவி பிரசன்னாவுடன் இணைந்து பாடினார். டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்தின் ஒலிப்பதிவைப்பற்றிய விமர்சனத்தில், "ஒரு நாட்டுப்புற பாடலில் பிரசன்னாவும் சௌந்தர்யாவும் பிரகாசிக்கின்றனர்" என்று எழுதியது.[9] இவர் பின்னர் விக்னேஷ் கார்த்திக் உடன் நடித்தார்.[10] 2021இல் வெளியான மாஸ்டர் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார்.[8] சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia