சௌரிந்திர மோகன் தாகூர்
ராஜா சௌரிந்திர மோகன் தாகூர் அல்லது சௌரிந்திரோ மோகன் தாகூர் (Raja Sourindra Mohun Tagore or Sourindro Mohun Tagore) (1840 - 1914 சூன் 5) இந்தியத் துணைக்கண்டத்தின் வங்காளப் பகுதியிலிருந்து இரவீந்திரநாத் தாகூரை உருவாக்கிய ஒரு உயர் வர்க்க குடும்பத்திலிருந்து வந்த ஒரு வங்காள இசைக்கலைஞராவார். இவர் இந்திய மற்றும் மேற்கத்திய இசைக் கோட்பாட்டைப் படித்தார். மேலும் இந்தத் தலைப்புகளில் விரிவாக வெளியிட்டார். இவர் வங்காள இசைப்பள்ளி மற்றும் வங்காள இசை அகாதமி ஆகியவற்றை நிறுவினார். பிரிட்டிசு இராச்சியத்தின் தீவிர ஆதரவாளர்களுக்கும், இந்தியாவில் உள்ள அதன் முகவர்களுக்கும், பிரித்தானிய தேசியகீதத்தை இந்திய இசைக்கு ஏற்ப இசையமைக்க நியமிக்கப்பட்டார். சுயசரிதைஇவர், தாகூர் குடும்பத்தின் பாதுரியகட்டா கிளையைச் சேர்ந்த ஹர குமாரின் மகனும், ஜதிந்திரமோகன் தாகூரின் தம்பியும் ஆவார். இவரது குடும்பத்திற்கு மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் ஹூக்லி ஆற்றின் அருகேயுள்ள பிளாசி மற்றும் புனித யாத்திரைத் தளமான சாகர் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் பெருமளவில் நிலங்கள் இருந்தன. [1] கொல்கத்தாவில் உள்ள ஐரோப்பிய மாதிரியான இந்துக் கல்லூரியில் படித்த இவர், இந்திய மற்றும் மேற்கத்திய இசையில் ஆர்வம் காட்டினார். இவர் தனது பதினைந்து வயதில் இசை குறித்த புத்தகத்தை வெளியிட்டார். இந்திய இசைக்கான இசைக் குறியீட்டு முறையை உருவாக்கி, கொல்கத்தாவில் முதல் இந்திய இசை இசைக்குழுவை அமைத்தார். இவர் இந்தியாவில் இருந்து இசைக்கருவிகள் சேகரித்தா. மேலும் பலவற்றை உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். பிலடெல்பியா (1875) மற்றும் ஆக்சுபோர்டு (1895) ஆகியவற்றிடமிருந்து கௌரவ இசை முனைவர் பட்டமும் பெற்றார். [2] இசை மற்றும் எழுத்துக்கள்1877 ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் பேரரசி என்று அறிவித்தது "காட் சேவ் தி ராணி" என்ற பிரித்தானிய தேசிய கீதத்தை உருவாக்க வழிவகுத்தது. 1882 ஆம் ஆண்டில் பிரான்சிஸ் ஹார்போர்டின் ஆலோசனையின் பேரில் ஒரு தேசிய கீதக் குழு உருவாக்கப்பட்டது. 1883 ஆம் ஆண்டில் இவர் அதற்கு இந்திய சை வடிவம் அளித்தார். தேசியகீதத்தை கொல்கத்தாவின் பேராயர் கல்லூரியின் மிர்சா முகமது பக்கீர் கான் அரபு மற்றும் பாரசீக மொழிகளில் மொழிபெயர்த்தார். இவை பின்னர் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. [3] இவர் இந்துக்களின் சாதி அமைப்பு (1884) என்ற நூலை வெளியிட்டு அதன் பழங்காலத்தைக் குறிப்பிட்டு இந்திய சமுதாயத்தில் அதன் பங்கை நியாயப்படுத்தினார். சௌரிந்திராவின் வெளியிடப்பட்ட படைப்புகளில் காளிதாசரின் மாளவிகாக்கினிமித்திரத்தின் மொழிபெயர்ப்பும் இருந்தது. இவர் 1871 ஆம் ஆண்டில் வங்காள இசைப் பள்ளியையும், 1881 ஆம் ஆண்டில் வங்காள அகாடமி ஆஃப் மியூசிக் நிறுவனத்தையும் நிறுவினார். அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சக உறுப்பினராகவும், 1880 ஆம் ஆண்டில் இந்தியப் பேரரசின் மிக உயர்ந்த ஒழுங்கின் தோழராகவும் நியமிக்கப்பட்டார். 1877ஆம் ஆண்டில், ஜப்பானுடனான இசை உறவைப் புதுப்பிக்க இவர் ஒரு முயற்சியை மேற்கொண்டார். இரண்டு இசைக் கருவிகளை சகாப்தத்தின் முட்சுகிடோ பேரரசருக்கு அனுப்பி இரு நாடுகளின் இசை மரபுகளை ஒன்றிணைக்க உதவினார். [4] 1884 ஆம் ஆண்டில், பிற நாடுகளில் இந்திய இசை மீதான ஆர்வத்தையும் ஆய்வையும் ஊக்குவிப்பதற்காக, இலண்டனின் அரச இசைக் கல்லூரி உட்பட வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நிறுவனங்களுக்கு ஏராளமான இந்திய கருவிகளை இவர் நன்கொடையாக வழங்கினார். தாகூர் கல்லூரியில் வருடாந்திர விருதாக, தாகூர் தங்கப் பதக்கத்தை நிறுவினார். இது இன்றும் "பொதுவாக தகுதியான மாணவர் (கள்)" க்கு வழங்கப்படுகிறது [5] . குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia