ச. இராமதாசு
ச. இராமதாசு (Ramadoss, பிறப்பு: சூலை 25, 1939) ஒரு தமிழக அரசியல்வாதியும், கல்விப்பயிற்சியால் மருத்துவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தற்போதைய தலைவரும் ஆவார்.[1][2] இந்தக் கட்சியை 1990-களில் தொடங்கினார். இதற்கு முன்னர், வன்னியர் சங்கத்தில் அங்கம் வகித்தார். இவரது ஆதரவாளர்களால் "அய்யா" என்ற பெயரிலே அழைக்கப்படுகின்றார். வரலாறுஇவர் 1939 ஆம் ஆண்டு சூலை மாதம் 25 ஆம் தேதி, தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்சிவிரி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சஞ்சீவராயக் கவுண்டர், தாயார் நவநீத அம்மாள் ஆவார். இவர் உடன்பிறந்தோர் நான்கு பேர், ஒருவர் சகோதரி, மூவர் சகோதரர் ஆவர். கல்வியும் தொழிலும்சென்னை மருத்துவக் கல்லூரியில் 1959 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை மருத்துவம் கற்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார் இராமதாசு.[3] 1965 ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார்.[3] 1980இல் தான் சார்ந்த வன்னியர் சமூகத்தின் நலனுக்காக வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார். 1990இல் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக உருவெடுத்தது. திருமணமும், குடும்பமும்இவர் சரசுவதி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஸ்ரீகாந்தி, கவிதா என இரண்டு மகள்களும், அன்புமணி என்னும் ஒரு மகனும் உள்ளனர். பணிகளும் பிறசேவைகளும்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia