ச. தமிழ்ச்செல்வன்
ச.தமிழ்ச்செல்வன் (S. Tamilselvan) தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். சிறுகதை எழுத்தாளராகவும்,[1][2] களப் பணியாளராகவும், மாற்றுக் கல்வியாளராகவும் அறியப்படுகிறார். பூ திரைப்படத்தின் திரைக்கதை எழுதியதற்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருதைப் பெற்றார். கரிசல் மண்ணின் கதைகளை தொடர்ந்து எழுதுகிறார். இவரது `வெயிலோடு போய்' சிறுகதை, தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றில் ஒன்றாகும். அரசியல் எனக்குப் பிடிக்கும் என்ற கட்டுரைத் தொகுப்பு, பரவலான வாசகர்களை ஈர்த்தது. வாழ்க்கைக் குறிப்பு1954 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் சண்முகம்-சரசுவதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும் என மாறி மாறி பணியாற்றினார். எழுத்தாளர் கோணங்கி , நாடகவியலாளர் ச. முருகபூபதி. ஆகியோர் இவரது சகோதரர்களாவர். நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என விரிவடைந்த வாசிப்புத் தளம் கல்லூரி காலங்களில் இவரை எழுதத் தூண்டியது. கோவில்பட்டியிலிருந்து வெளியான நீலக்குயில் என்ற சிறுபத்திரிக்கையில் இவரது முதல் கவிதை "ஒருநாள் டைரி" 1972 ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தவர் பின்னர் சிறுகதை எழுதத் தொடங்கினார். 1978 ஆம் ஆண்டில் முதல் சிறுகதையான திரைச்சுவர்கள் தாமரை இதழில் வெளிவந்தது. தொடர்ந்து கதைகள் எழுதினார். முதல் கதைத் தொகுப்பு வெயிலோடு போய் 1984 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அசோகவனம், வெயிலோடு போய் சிறுகதைகள், பூ என்ற திரைப்படத்தின் மூலக்கருவாகின. இத்திரைப்படத்திற்காக தமிழக அரசு 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த கதாசிரியர் விருதை இவருக்கு வழங்கியது. படிப்பறிவை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு முழுநேரமும் விழிப்பணர்வு சேவையாற்றினார். சேவைப் பணியிலும், இலக்கிய படைப்பிலும், தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதற்காக அஞ்சலகப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது தனது இணணயர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இரா.வெள்ளதாயுடன் சிவகாசியில் வசித்து வருகிறார். விருதுகள்தமிழக அரசின் சிறந்த திரைக்கதையாளர் விருது (பூ-2008) வெளிவந்துள்ள நூல்கள்
சிறு நூல்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia