ஜகாங்கீர் மகால், ஓர்ச்சா
ஜகாங்கீர் மகால் (Jahangir Mahal, Orchha) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஓர்ச்சாவில் அமைந்துள்ள ஒரு கோட்டையும் பாதுகாப்பு அரணுமாகும்.[1][2] இது ஜகாங்கீரின் கோட்டை, ஓர்ச்சா அரண்மனை, மகால்-இ-ஜகாங்கிர் ஓர்ச்சா எனவும் அறியப்படுகிறது. வரலாறுஜகாங்கீர் மகால், கி. பி. 17-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. இது இப்பகுதியின் ஆட்சியாளர் வீர் சிங் தேவ் முகலாய பேரரசர் ஜஹாங்கீரின் வருகையின் போது அவரை அன்பாக வரவேற்பதற்காக கட்டப்பட்டது. அரண்மனையின் நுழைவாயில் கலையழகும் மரபுச் சிறப்பும் மிளிர்வதாகக் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் முன் சுவர் கிழக்கு நோக்கி உள்ளது. மேலும் ஓடுகளால் மூடப்பட்டுள்ளது. இது மூன்று மாடிகளைக் கொண்ட அமைப்பாகும். இது அழகாகத் தொங்கும் முகப்புகள், தாழ்வாரங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.[3] ஜகாங்கீர் மகாலின் குவிமாடங்கள், தைமூர் பாணியில் கட்டப்பட்டுள்ளன. அதன் பிரமாண்டமான வாயில்கள் ஒரு போர் யானை நுழையும் அளவுக்குப் பெரியவை. மேலும், அதன் உச்சியில் பீரங்கிகளை வைக்குமளவுக்கு உயரமானவவை. இதனையும் காண்கமேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia