மோகன்பூர் தொகுதியின் உசபசாரில் பத்திரிகை தகவல் பணியகம் ஏற்பாடு செய்திருந்த திரிபுரா பாரத் நிர்மான் பொதுத் தகவல் பிரச்சாரத்தை விளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார்.
ஜிதேந்திர சௌத்ரி (Jitendra Chaudhury) இந்தியாவின்திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1958 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சியம்) உறுப்பினராக திரிபுரா அரசியலில் ஈடுபடுகிறார். சப்ரூம் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பணிபுரிகிறார். முன்னதாக, இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தல்களில் திரிபுரா கிழக்கு (நாடாளுமன்ற தொகுதி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் ரெபதி திரிபுராவுக்கு எதிராக தோல்வியடைந்தார். [2][3]
ஜிதேந்திர சவுத்ரி இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிசுட்டு) திரிபுரா மாநிலக் குழுவின் தற்போதைய செயலாளராக உள்ளார்.[4][5][6] 2018 ஆம் ஆண்டில் நடந்த 22ஆவது பொதுவுடைமைக் கட்சி மாநாட்டில், மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆதிவாசி அதிகார் இராசுட்ரிய மஞ்சின் இன் தேசியத் தலைவரும் ஆவார்.[7]