ஜி. செந்தமிழன்ஜி. செந்தமிழன் (G. Senthamizhan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதியில் 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழகத்தின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1] இவர் காவல்துறையினர் மீது தமது செல்வாக்கைப் பயன்படுத்தி சில அதிமுக உறுப்பினர்களை மீட்க முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இதன் காரணமாக முதல் ஐந்து மாதத்தில் ஏற்பட்ட மூன்றாம் சட்டமன்ற அமைச்சர்களின் இலாகா மாற்றத்தின்போது (2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம்) இவர் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ஆகிய பதவிகளிலிருந்து அன்றைய முதல்வரான செயலலிதாவால் நீக்கப்பட்டார்.[2] தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் இத்தொகுதியை மா. சுப்பிரமணியன் என்பவர் கைப்பற்றினார்.[3] சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது உடனடியாக முழுஆற்றலுடன் செயல்படாமல் பொறுப்பற்று இருந்த காரணத்தினால், 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக வேட்பாளராகத் தேர்வு செய்யப்படாத பதின்மூன்று அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களில் ஜி. செந்தமிழனும் ஒருவர் ஆவார்.[4] இவர் சட்டவியல் பட்டதாரி ஆவார். இவர் தமிழ்நாடு முனைவர். அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டவியல் பட்டம் பெற்றுள்ளார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia