ஜெ. சிவசண்முகம் பிள்ளை
ஜெகநாதன் சிவசண்முகம் (J. Shivashanmugam Pillai)(24 பிப்ரவரி 1901-17 பிப்ரவரி 1975) இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1938ஆம் ஆண்டில், சென்னை மாநகர முதல் பட்டியல் சாதி மாநகரத் தந்தை ஆவார். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு சென்னை சட்டமன்றத்தின் முதல் சபாநாயகராகவும் பணியாற்றினார். ஆரம்ப கால வாழ்க்கைசிவசண்முகம் சென்னையில் பிப்ரவரி 24, 1901 அன்று பிறந்தார். இவரது தந்தை ஜெகநாதன் மேலாளராக இருந்தார்.[1] சென்னையில் பள்ளிப்படிப்பு முடித்த பின் இலயோலாக் கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனியாக முதுகலை முடித்தார்.[1] சுதந்திர இந்தியாவில் முதல் சபாநாயகர்மாநில சட்டமன்றங்களுக்கான முதல் தேர்தல்கள் 1951இல் நடத்தப்பட்டன. சுதந்திரம் பெற்றதிலிருந்து, அனைத்து இந்திய குடிமக்களையும் சேர்க்க உரிமையை விரிவுபடுத்தியது. சிவசண்முகம் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் முதல் சபாநாயகராக வெற்றிகரமாகப் பரிந்துரைக்கப்பட்டார். சிவசண்முகம் 1951 முதல் 1955 வரை சட்டமன்ற சபாநாயகராக பணியாற்றினார்.[2][3] பிற்கால வாழ்வு1955 முதல் 1961 வரை சிவசண்முகம் ஒன்றிய பொதுச் சேவை ஆணையத்தின் உறுப்பினராக பணியாற்றினார்.[1] 1962ஆம் ஆண்டில், இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்டு, 1962 முதல் 1968 வரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினார்.[1][4] குடும்பம்சிவசண்முகம் 1937இல் சந்திராவை மணந்தார். இவர்களுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.[1][4] இறப்புசிவசண்முகம் 17 பிப்ரவரி 1975இல் தனது 73 வயதில் வயது முதிர்வு காரணமாக இறந்தார்.[4] படைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia