ஜேக்கப் சகாயகுமார் அருணி
ஜேக்கப் என்ற 'ஜேக்கப் சகாயகுமார் அருணி[1] (சூன் 4, 1974 - நவம்பர் 4, 2012), சென்னையைச் சேர்ந்த வாலுவர் (சமையற் கலை நிபுணர்). ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்[2] உள்ளிட்ட பலருக்கும் உணவு சமைத்துக் கொடுத்துள்ளார். பல்வேறு பெரிய உணவங்களுக்கும் தலைமை வாலுவராகப் [2] பணி புரிந்துள்ள இவர், சங்கரா வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டரிங்க் துறையின் இயக்குராக இருந்தார்.[2] இளமைக் காலம்இவர் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர்.[3] இவர் நான்கு வயதில்[4] தாய், மருத்துவர் விமலா அருணியிடமிருந்து[1] சமையற்கலை கற்றுக்கொண்டதாகவும், 14-வயதில்[5] இருந்து சமையற் பயிற்சி பெற்றதாகவும் பல்வேறு கருத்து நிகழ்கிறது. இவர் மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர்.[1][4] கின்னஸ் விருது2010–ம் ஆண்டு மார்ச் மாதம் 24 மணி நேரத்தில் 485 வகையான உணவுகளை தயார் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர்.[4][5][6][7] நூல்கள்
நிகழ்ச்சிகள்சன் தொலைக்காட்சியில், ஆஹா என்ன ருசி என்ற சமையல் தொடரில் தன்னுடைய சமையல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்களித்து வந்தார்.[10] இறப்புமாரடைப்புக் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 05,நவம்பர்,2012 அன்று காலமானார்.[10] குறிப்புகளும் மேற்கோள்களும்
|
Portal di Ensiklopedia Dunia