டட்லி - செல்வா ஒப்பந்தம், 1965
டட்லி - செல்வா ஒப்பந்தம், 1965 அப்போதைய இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயக்காவுக்கும் தமிழர் தரப்பு தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்குமிடையே 1965, மார்ச் 24 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும், வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழிபேசுவோருக்கே முன்னுரிமை வழங்குவதும் இவ் ஒப்பந்தத்தின் சாராம்சங்கள் ஆகும். வரலாறு1965 மார்ச் 22 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சி 66 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 41 ஆசனங்களையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும் லங்கா சமசமாஜக் கட்சி 10 ஆசனங்களையும் கைப்பற்றின. 151 ஆசனங்களில் 76 ஆசனங்கள் இருந்தால்தான் அரசாங்கத்தை நடத்த முடியும். மிகுதி ஆசனங்களுக்கு மற்றக் கட்சிகளின் ஆதரவைத்தேட வேண்டியிருந்தது. ஐ.தே.கட்சிக்கு அரசமைக்கும் பங்காளியாக தமிழரசுக் கட்சி முன்வந்தது. அதைத் தொடர்ந்து டட்லி- செல்வா ஒப்பந்தம் எழுதப்பட்டது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia