தண்டி (சமஸ்கிருதம்)
சமஸ்கிருத கவிஞர் தண்டி கிபி எட்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்தவர். இவர் பண்டைய இந்தியாவின் சமஸ்கிருத மொழி இலக்கணம், உரைநடை மற்றும் காதல், வீரம் பாடும் கவிஞர் ஆவார். ஆசிய வரலாற்றில் மிகவும் பிரபலமான சமஸ்கிருத எழுத்தாளர்களில் தண்டியும் ஒருவர். அவரது எழுத்துக்கள் அனைத்தும் சமஸ்கிருதம் மொழியில் உள்ளது. கவிஞர் தண்டி இயற்றிய அவந்தி சுந்தரி கதையில், தண்டி தன்னை, பல்ல்வ மன்னர் சிம்மவிஷ்ணு, மேலைக் கங்கர் வம்ச மன்னர் துர்வினிதன் மற்றும் விதர்பா அரசவைக் கவிஞரான தாமோதரனின் கொள்ளுப் பேரன் என்று கூறுகிறார். தண்டியின் காலம் கிபி 680 – 720 என வரலாற்று அறிஞர் யிகல் ப்ரோனர் கருதுகிறார். தண்டியின் படைப்புகள் நன்கு பாதுகாக்கப்படவில்லை. அவர் இப்போது முழுமையடையாத தசகுமாரசரிதையை இயற்றினார். உரைநடையில் "அவந்தி சுந்தரி" (அவந்தியில் இருந்து அழகான பெண்மணியின் கதை) இன்னும் குறைவாகவே முழுமையானது. அவரது "காவ்ய தர்ஷா" (கவிதையின் கண்ணாடி), பாரம்பரிய சமஸ்கிருத கவிதைகளின் கையேடு ஆகும். மேலும் இவர் காவ்யதர்ஷா இயற்றியதற்காக மிகவும் பிரபலமானவர். ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவ அரசவையில் இவரது படைப்புகள் அனைத்தையும் தண்டியே எழுதியுள்ளார் என்பது இப்போது பரவலான ஒருமித்த கருத்து உள்ளது. படைப்புகள்
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia