தமிழகத்தில் புதிய கற்காலம்[1] என்பது கி.மு. 3000[2][3] - 1000 வரை நிலவியது. குறிப்பாக தமிழகத்தின் வட ஆர்க்காடு பகுதியிலுள்ள பையம்பள்ளியில் (தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது) இப்புதிய கற்காலச் சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன.[4]
பையம்பள்ளி
பையம்பள்ளியில் காணப்படும் புதிய கற்காலச் சமுதாயம் இரு விதத்தில் காணப்படுகின்றது.[4]
முதற்பிரிவு
இக்கால மக்கள் வெளுப்பு மிக்க சாம்பல் நிற மட்பாண்டங்கள், மெருகூட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள், சிவப்பு நிற மட்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தினர். பல வகைக் கற்களால் ஆன கற்கருவிகள், கற்கோடாரிகள், தானியங்களை அரைக்க, இடிக்க உதவும் கற்கருவிகள் ஆகியனவும் கிடைத்துள்ளன.
மேலும் இக்கால மக்கள் வாழ்ந்த பல்வேறு அளவுள்ள குழி வீடுகளில் குச்சி நடுகுழிகள் காணப்படுவதால் இவர்கள் கூரைகள் அமைந்த குடிசைகளில் வாழ்ந்ததாகத் தெரிகிறது.
இரண்டாம் பிரிவு
இதே புதிய கற்காலத்தைச் சேர்ந்த இரண்டாம் பிரிவு மக்கள் சாம்பல் மற்றும் சிவப்பு நிற மட்கலன்களையும் பயன்படுத்தினர். குறிப்பாக சக்கரத்தால் செய்யப்பட்ட பானைகள் இங்கு கிடைத்தனவற்றுள் சிறந்தனவாம்.
↑ 1.01.11.2இராசவேலு சு, திருமூர்த்தி கோ (1995). தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள். p. 106.
↑ 2.02.1Rajan k (1997). Archeological Gazatter of Tamilnadu. Chennai. pp. pp 111 - 112, 262–273. {{cite book}}: |pages= has extra text (help)CS1 maint: location missing publisher (link)