தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB); இது தமிழ்நாடு அரசு மூலமாக நிர்வகிக்கப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகும். அது தமிழ்நாடு குடிசை பகுதிகள் (மேம்படுத்தல் மற்றும் இசைவு) சட்டத்தின் 1971 (Act 1971) மூலம் உருவாக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் சேரிகளை அகற்றி, சுகாதார வசதிகளை வழங்குவதே இந்த குழுவின் முக்கிய செயல்பாடு ஆகும்.[1] தோற்றம்"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்" என்ற பொன்மொழியை குறிக்கோலாகக் கொண்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், 1970 இல் நிறுவப்பட்டது. இதன் நடவடிக்கைகள் துவக்கத்தில் சென்னை மாநகரத்தில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் 1984 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு கட்டங்களாக அனைத்து மாநகரங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகள் என நீட்டிக்கப்பட்டது. மேலும் இந்நிறுவனத்தின் இலக்கு என்பது, 2022 ஆம் ஆண்டில் சேரி அல்லாத தமிழ்நாட்டை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.[2]
பின்னணிதற்போது ஆர். என். ரவி மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக உள்ள தமிழ்நாடு|தமிழ்நாட்டில், மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முதலமைச்சராகவும், அமைச்சர்களின் தலைவராகவும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் என்பவரும் இருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,21,47,030 ஆக உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் பரப்பளவு 1,30,058 கிலோமீட்டர்கள் உள்ளடக்கியதாகும்.[3] சமூக மேம்பாட்டு பிரிவுதமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆரம்பத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் வழங்கியது, பின்னர் குடிசைவாசிகள் வாழ்வாதாரத்தை மாற்றம் கொண்டுவரும் நோக்கத்துடன் நகர்த்தப்பட்டது. அபிவிருத்திக்கு சமூக அடிப்படையான மனிதாபிமான அணுகுமுறையில் கட்டப்படும் வீடுகள், திட்டங்கள் வாயிலாக, வீடுகள் மற்றும் புனர்வாழ்வு மரபுவழி அணுகுமுறையை நோக்கமுள்ளவையாக கருதப்படுகிறது. மேலும் சமூகத் தொழிலாளர்கள் மற்றும் சமூகவியலாளர்கள் உள்ளடக்கிய சமூக அபிவிருத்தி, விழிப்புணர்வு பொறியியல், போன்ற திட்டமிடல் மற்றும் வருவாய் அம்சங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, ஆகவே இந்த வாரியம் பயனாளிகள் தொடர்பாக இது ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. வாரியத்தால் முறைப்படுத்தப்படும் கொள்கைகள், மற்றும் திட்டங்கள் சேரி வாசிகள் உண்மையில் கொண்டுசேர்க்கிறது. இது உலக வங்கியால் நிதியளிக்கப்பட்ட குடிசை மேம்பாட்டு திட்டத்தில் சமூக பங்கேற்பை உறுதிப்படுத்திய பிறகு, 1978 ஆம் ஆண்டு அது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும ஆணையத்தின் முன்முயற்சியில் செயல்படுகிறது.[4] உத்திகள்சேரி குடும்பங்கள் தீ, வெள்ளம், போன்ற பேரிடர் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. கட்டப்படும் ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு பல்நோக்கு அறைகளாக, படுக்கையறை, சமையலறை, சுதந்திரமான கழிப்பறை, நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வெளியேற ஏற்பாடுகள் ஆகியவற்றையும், மேலும் நடைபாதை அணுக்கம், தெரு விளக்கு, மேற்பரப்பு வடிகால் வழங்கப்படுகின்றன. 20 ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு மாதத்திற்கு ரூபாய் 250 / - என்ற விகிதத்தில் அதிகமான நல்கைத் தொகை வாடகைக் கொள்முதல் முறைமையில் குடிசைக் குடும்பங்களுக்கு இந்த குடியிருப்புக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள குடிசைகளில், அனைத்திற்கும் சமமான இட ஒதுக்கீடு சாத்தியமற்றதல்ல, எனவே அவைகள் நீக்கப்படுகின்றன.[5] அனைவருக்கும் வீடு"தொலைநோக்குத் திட்டம் 2023" இது, விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் முதல் முறையாக உயர் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஒரு மூலோபாய நீண்ட கால திட்டமாகும். இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற குடிமக்களுக்கு வீடுகளை வழங்குவதற்கும், 2023 க்கு முன்னர் மாநகரங்கள் மற்றும் நகரங்களை சேர்ப்பதற்கும் உதவுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற மக்களுக்கும் அடிபடைவசதியுடன் கூடிய வீடு வழங்கப்படும்.[6] இந்த வீட்டுவசதிகள் “அனைவக்கும் வீடு” திட்டத்தின் கீழ் நிதியுதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கு முன்னர் அனைத்து தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்குவதற்காக மாநிலங்கள் மூலம் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு உதவி வழங்கும் வகையில் நகர்ப்புற பகுதிகளில் "அனைத்து மக்களுக்கான வீட்டுவசதி" திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் இந்திய பிரதம மந்திரியால் துவக்கப்படும் இந்த குறிப்பணிகள், 30 சதுர மீட்டர் வரை வீடுகளின் கட்டுமானத்தை ஆதரிக்கிறது. மத்திய அரசின் மானியம் பெறும் மற்றும் மத்திய துறை திட்டங்கள் உதவியுடன் அடிப்படை குடிமை உள்கட்டமைப்புடன் இத்திட்டம் உருவாக்கபட்டது.[6]
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia