தமிழ் மொழியின் வரலாறு (நூல்)
தமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது. 1968 ஆம் ஆண்டில் இதன் 12 ஆவது பதிப்பு வெளியானது. 2003 ஆம் ஆண்டில் இதன் மறுபதிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நோக்கம்இவர் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறு குறித்து ஆங்கிலேயர் தமது மொழியில் எழுதிய நூல்களே கிடைத்து வந்தன. இவற்றை அவர்கள் தமக்குத் தெரிந்த வரையில் வாய்க்குவந்தபடி எழுதினர் என்றும் அவற்றை ஆராய்ந்து குற்றங்களைக் களைந்து உண்மையைக் கண்டறிவோர் குறைந்துவிட்டனர் என்றும், தமிழில் பட்டப் படிப்புகளுக்கு உகந்த நூல் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர் என்றும் கருதி இந்நூலாசிரியர் இந்நூலை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.[1] உள்ளடக்கம்இந்நூல் பின்வரும் ஒன்பது அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia