யாப்பிலக்கணத்தில், தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும்.[1]செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும். செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது. அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது. செய்யுளொன்றில் வரும் பெரும்பாலான சீர்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு தளைகள் அமைகின்றன. செய்யுளின் முதற் சீரும், இறுதிச் சீரும் அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டுமே சீர்களைக் கொண்டிருப்பதால் அவை தொடர்பில் ஒவ்வொரு தளை மட்டுமே அமையும்.
தளைகளின் வகைகள்
இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தளை ஏழு வகைப்படும். அவை:
வருஞ்சீர் கனிச்சீராயின், சிறப்புடை ஒன்றிய வஞ்சித்தளை எனப்படும்.
வருஞ்சீர் கனிச்சீர் தவிர்ந்த வேறு சீராயின், சிறப்பில் ஒன்றிய வஞ்சித்தளை எனப்படும்.
7. ஒன்றாத வஞ்சித்தளை (கனி முன் நேர்)
- நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்)
- நிலைச்சீர் ஈற்றசை - நிரை
- வருஞ்சீர் முதலசை - நேர்
வருஞ்சீர் கனிச்சீராயின், சிறப்புடை ஒன்றாத வஞ்சித்தளை எனப்படும்.
வருஞ்சீர் கனிச்சீர் தவிர்ந்த வேறு சீராயின், சிறப்பில் ஒன்றாத வஞ்சித்தளை எனப்படும்.
எடுத்துக்காட்டுகள்
குழலினி(து) யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
என்பது ஒரு திருக்குறள். இது இரு அடிகளைக் கொண்ட வெண்பா வகையைச் சேர்ந்த ஒரு செய்யுள். இதன் ஒவ்வொரு சீரும் அசைபிரிக்கப்பட்டு, அவற்றுக்குரிய அசை வகைகளுடன் கீழே காட்டப்பட்டுள்ளது.
இதிலே முதலிரு சீர்கள் தொடர்பில், நிலைச்சீராக அமைவது ஈரசைச்சீர். நிலைச்சீரின் ஈற்றசை நிரை. வருஞ்சீரின் முதல் அசை நேர். நிலைச்சீர் இயற்சீராக (ஈரசைச்சீர்) இருக்க, அதன் ஈற்றசையும் வருஞ்சீரின் முதலசையும் வேறுபட்ட வகைகளாக இருப்பின் விளைவது இயற்சீர் வெண்டளை எனப்படும்.
இதுபோல இரண்டாம் மூன்றாம் சீர்கள் தொடர்பில் நிலைச்சீர், மூவசைச்சீர் ஆகும். நேரசையை இறுதியில் கொண்ட மூவசைச் சீர் வெண்சீர் எனப்படும். வருஞ்சீரின் முதல் அசையும் நேரசையாக உள்ளது. இவ்வாறு அமையும் தளை வெண்சீர் வெண்டளை ஆகும்.
இவ்வாறே இக்குறளிலுள்ள எல்லாச் சீர் இணைகளுக்கும் இடையிலுள்ள தளைகளின் வகைகள் கீழே தரப்பட்டுள்ளன:
குழ.லினி(து) யா.ழினி.து
சிறப்பில் இயற்சீர் வெண்டளை
யா.ழினி.து என்.பதம்
சிறப்பில் வெண்சீர் வெண்டளை
என்.பதம் மக்.கள்
சிறப்புடை இயற்சீர் வெண்டளை
மக்.கள் மழ.லைச்.சொல்
சிறப்பில் இயற்சீர் வெண்டளை
மழ.லைச்.சொல் கே.ளா
சிறப்பில் வெண்சீர் வெண்டளை
கே.ளா தவர்
இயற்சீர் வெண்டளை
பாக்களும், தளைகளும்
மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள பல்வேறு விதமான தளைகள், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பாக உரியவை. இதனாலேயே குறிப்பிட்ட தளைகளின் பெயர்கள் தொடர்புடைய பாக்களின் பெயர்களால் வழங்கப்படுகின்றன.