தாக்கூர் ராம் லால்
தாக்கூர் ராம் லால் (Thakur Ram Lal)(7 சூலை 1929 – 6 சூலை 2002) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவர் ஆவார். சட்டமன்ற உறுப்பினராகலால் 1957-ல் ஜுப்பல் கோட்காய் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1962, 1967, 1977, 1980 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் இதே தொகுதியிலிருந்து இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் இருந்தார்.[1] மேலும், மாநில அரசின் தலைமைக் கொறடாவாகவும் இருந்தார்.[2] முதல்வராகஇவர் 28 சனவரி 1977-ல் இமாச்சலப் பிரதேசத்தின் இரண்டாவது முதலமைச்சரானார். இதனைத் தொடர்ந்து 30 ஏப்ரல் 1977 வரை பதவியிலிருந்தார். 1977 சூன் 29 முதல் 1980 பிப்ரவரி 13 வரை இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். பின்னர் லால் மீண்டும் 14 பிப்ரவரி 1980 அன்று மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று 7 ஏப்ரல் 1983 வரை பதவியிலிருந்தார்.[1] ஆளுநராக1983 ஆகத்து 15 முதல் 29 ஆகத்து 1984 வரை ஆந்திரப் பிரதேச ஆளுநராகப் பணியாற்றினார். ஆந்திரப் பிரதேசத்தின் நிதியமைச்சர் என்.பாசுகர் ராவை முதலமைச்சராக நியமித்ததால், இவருக்கு கெட்டப் பெயரானது. என். டி. ராமராவ் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தபோது பாசுகர ராவுக்கு 20% சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இல்லாதபோதும், அப்போதைய காங்கிரசு தலைமையின் உத்தரவின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. என். டி. ராமராவ் ஒரு வாரத்திற்குப் பிறகு ஆந்திராவின் தலைநகருக்குத் திரும்பினார். ஆனால் ராம் லால் முதல்வர் நியமனத்தில் பிடிவாதமாக இருந்தார்.[3] பின்னர் ராமராவ், லால் மற்றும் காங்கிரசுக்கு எதிராக பெரும் பிரச்சாரத்தைத் தொடங்கினார். 30 நாட்களுக்குப் பிறகு, இந்தியக் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் ராம் லாலை பதவி நீக்கம் செய்தார். இதன் பின்னர் 3 நாட்களுக்குப் பிறகு என். டி. ராமராவ் மீண்டும் ஆந்திராவின் முதல்வரானார். அரசியல் வாழ்க்கை1957 முதல் ஜுப்பல் கோட்காய் தொகுதியிலிருந்து 9 முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமை ராம் லால் பெற்றுள்ளார்.[4] 1977-ம் ஆண்டு காங்கிரசு எதிர்ப்பு அலை மிக அதிகமாக இருந்த காலகட்டத்திலும், மொத்த வாக்குகளில் 60.2 சதவீதத்தைப் பெற்று மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு இவர் முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின்னர் முன்னாள் மத்திய இணை அமைச்சரான வீரபத்திர சிங் பதவியேற்றார்.[5] 1048 நாட்கள் முதலமைச்சராகப் பதவி வகித்தார். பின்னணிதாக்கூர் ராம் லால் நான்கு மகள்கள், ஒரு பேரன் மற்றும் ஒரு பேத்தியும் இருந்தனர்.[4] இவரது பேரன் ரோஹித் தாக்கூர் ஜுப்பல்-கோட்காய் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இறப்புலால் 6 சூலை 2002 அன்று பாரிய மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிம்லாவில் இறந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia