திபெந்திரா
திபெந்திரா வீர விக்ரம் ஷா (Dipendra Bir Bikram Shah) (நேபாளி: दीपेन्द्र वीर विक्रम शाह) (27 சூன் 1971 – 4 சூன் 2001) நேபாளத்தை 1 சூன் 2001 முதல் 4 சூன் 2001 முடிய ஆண்ட மன்னராவர். அரச குடும்ப படுகொலைகளின் போது, இளவரசர் திபெந்திரா தன்னைதானே சுட்டுக் கொண்டு, கோமா நிலையில் மருத்துவமனையில், நேபாள மன்னராக 1 சூன் 2001ல் பதவி சூட்டப்பட்டப்பட்டார். பின்னர் கோமா நிலையிலே 4 சூன் 2001ல் மரணமடைந்தார். இவருக்குப் பின் நேபாள மன்னராக பதவியேற்ற, இவரது சித்தப்பா ஞானேந்திரா, நேபாளத்தில் 2008ல் முடியாட்சி முறை ஒழிக்கப்படும் வரை, நேபாள மன்னராக இருந்தவர். கல்விமன்னர் திபெந்திரா பள்ளிக் கல்வியை காட்மாண்டுவிலும்; கல்லூரிக் கல்வியை இங்கிலாந்து நாட்டின் ஈடன் கல்லூரியிலும் படித்தவர். பின்னர் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்திலும், நேபாள இராணுவப் பயிற்சி கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை முடித்தவர். நேபாள அரச குடும்பப் படுகொலைகள், 20011 சூன் 2001 அன்று காட்மாண்டு நகரத்தில் உள்ள நாராயணன்ஹிட்டி அரண்மனையில் மன்னர் பிரேந்திரா தலைமையில் அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில், இளவரசர் திபெந்திரா கையில் துப்பாக்கியுடன் தோன்றி, அரண்மனையில் உள்ளவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இத்துப்பாக்கிச் சூட்டில் மன்னர் பிரேந்திரா, ராணி ஐஸ்வரியா மற்றும் ஏழு அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். பின்னர் இளவரசர் திபெந்திரா தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டு, நான்கு நாட்களுக்குப் பின்னர் இறந்தார்.[1] இளவரசர் திபெந்திராவின் இப்படுகொலையின் நோக்கம் இதுவரை அறியப்படவில்லை. இளவரசர் திபெந்திராவின் காதலை, மன்னர் ஏற்காததால், வெகுண்ட திபெந்திரா இப்படுகொலை நிகழ்த்தினார் என்ற கருத்தியல் நேபாளத்தில் பேசப்படுகிறது. [1] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia