திருக்களம்பூர்
திருக்களம்பூர் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதி நகருக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3] வீரபாண்டிய கட்டபொம்மன், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கயத்தாறு நகருக்கு அருகிலுள்ள பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்படுவதற்கு முன் திருக்களம்பூர் பகுதியில் மறைந்திருந்ததாகவும், இங்குதான் அவர் ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு, சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.[4][5][6] அமைவிடம்திருக்களம்பூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 151.03 மீ. உயரத்தில், (10°12′20″N 78°29′47″E / 10.2055°N 78.4965°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்ட பகுதியில் அமைந்துள்ளது. சமயம்இந்துக் கோயில்கள்கதலிவனேசுவரர் கோயில், கொடியேரியம்மன் கோயில் மற்றும் கருப்பக்குடிபட்டி அய்யனார் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் திருக்களம்பூர் நகரில் அமைந்துள்ளன. இக்கோயில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகின்றன. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia