திருநீலகண்டர் (1939 திரைப்படம்)
திருநீலகண்டர் (Thiruneelakantar) 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, பி. கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] பாகவதரின் பாடல்களுக்காகவும், என். எஸ். கிருஷ்ணன்-டி. ஏ. மதுரம் ஆகியோரின் நகைச்சுவைக்காகவும் இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது,[2][3] பிரபலமான நாகசுரக் கலைஞர் டி. என். ராஜரத்தினம் பிள்ளை இத்திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார்.[3] திரைக்கதை63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனாரின் வாழ்க்கைச் சரிதம் இத்திரைப்படத்தின் கதையாகும்.[3] நடிகர்கள்
இவர்களுடன் ஈ. கிருஷ்ணமூர்த்தி, சேலம் சுந்தரம் ஐயர், ஜி. வி. கிருஷ்ணமூர்த்தி, எஸ். ஆர். திருவேங்கடம், ஜி. பி. கணேசய்யர், எம். தங்கையா, ஏ. எஸ். மதனகோபால் ஆகியோரும் நடித்திருந்தனர்.[1] நடிகைகள்
இவர்களுடன் டி. வி. அன்னபூரணி, எம். ஆர். சரஸ்வதி, டி. பி. தனலட்சுமி, எம். ஆர். அல்லி, ஆர். சாரதாம்பாள், எம். எஸ். மீனாட்சிசுந்தரி, பேபி சகுந்தலா, பேபி சுப்புலட்சுமி ஆகியோரும் நடித்திருந்தனர்.[1] பாடல்கள்இப்படத்தில் மொத்தம் 21 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[1] பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றி, இசையமைத்திருந்தார். இவற்றில் தீன கருணாகரனே என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.[2] திருவாலியமுதனார் இயற்றிய பவழ மால் என்ற திருவிசைப்பா டி. என். ராஜரத்தினம் பிள்ளையின் இசையமைப்பில் நாட்டை இராகத்தில் இடம்பெற்றது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia