இலங்கைத் தீவில் உள்ள பிரித்தானிய குடியேற்றங்களும் பிரதேசங்களும் அதன் சார்புகளும் (1802–1833)இலங்கைத் தீவும் அதன் பிரதேசங்களும் சார்புகளும் (1833–1931)இலங்கைத் தீவும் அதன் சார்புகளும் (1931–1948)
பிரித்தானிய இலங்கை (British Ceylon) அல்லது பொதுவாக சிலோன் என்பது இலங்கையில்1796 ஆம் ஆண்டில் இருந்து 1948 வரையிலான பிரித்தானிய ஆட்சியைக் குறிப்பிடுகிறது.[3][4][5][6] 1802 முதல் 1833 வரை இலங்கைத் தீவில் உள்ள பிரித்தானிய குடியேற்றங்களுடன் பிரதேசங்களுடன் அதன் சார்புகளும் எனவும், அதன்பின் 1833 முதல் 1931 வரை இலங்கைத் தீவும் அதன் பிரதேசங்களும் சார்புகளும் எனவும், இறுதியாக இலங்கைத் தீவும் அதன் சார்புகளும் என 1931 முதல் 1948வரை அறிப்பட்டது. 1796 மற்றும் 4 பிப்ரவரி 1948 இற்கு இடையில் இன்றைய இலங்கை பிரித்தானிய அரச காலனியாக இருந்தது.
பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் இலங்கை கொண்டு வந்தபின், பக்கத்தில் உள்ள இடங்களை பிரித்தானியர் கண்டி அரசரிடம் கேட்டனர். ஆனால், அரசர் மறுத்துவிட்டார். கோபம் கொண்ட பிரித்தானியர் உள்ளூர் மக்களை கருவியாகக் கொண்டு அரசரை எதிர்க்கத் திட்டம் தீட்டினர். நாயக்கரான கண்டி அரசருக்கு பிரித்தானியரைக் கண்டு தீய மனப்போக்கு இருந்தது. ஒல்லாந்தர், போர்த்துக்கலை போல சிறிய நாடுகளிலிருந்து தன் தேசத்தை காப்பாற்றினார். எனினும் பிரித்தானியப் பேரரசைப் போன்ற பலம் மிகுந்த நாட்டை எதிர்ப்பது சுலபமற்றது எனக் கண்டி அரசர் புரிந்து கொண்டார்.