திருப்பணிகரிசல்குளம் ஊராட்சிதிருப்பணிகரிசல்குளம் ஊராட்சி (Thirupanikarisalkulam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[1][2] இந்த ஊராட்சி, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [3] திருப்பணிகரிசல்குளம் தற்போதைய (2023) பஞ்சாயத்து தலைவர் மு.பெர்சிஸ் சுரேஷ் அவர்கள். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2914 ஆகும். இவர்களில் பெண்கள் 1502 பேரும் ஆண்கள் 1412 பேரும் உள்ளனர். பெயர்காரணம்திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் திருபணிகள் முற்காலத்தில் இவ்வூரிலும் நடைபெற்றிருக்கின்றன. இந்த ஊரை சுற்றிலும் குளங்கள் உள்ளது,1 மேல நலண்டார்குளம்,2 கீழக்குளம்,3 வாகைக்குளம்,4 கரிசல்குளம். கரிசல்குளம் திருநெல்வேலியின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றாகும், இக்குளங்களில் கரிசல்மண் அதிகமாக உள்ளது. நெல்லையப்பர் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றதனாலும், இவ்வூரின் குளங்களில் கரிசல்மண் இருப்பதனாலும் இவ்வூருக்கு திருப்பணிகரிசல்குளம் என்று பெயர்பெற்றது. அடிப்படை வசதிகள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[3]
சிற்றூர்கள்இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[4]:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia