திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயில்
திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[2][3] இக்கோயிலானது, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் கோயிலின் ஓர் உபகோயிலாகும்.[4] கடல் மட்டத்திலிருந்து சுமார் 193 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் குருநாத சுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°52′53″N 78°04′20″E / 9.881285°N 78.072245°Eஆகும். இக்கோயிலில் மூலவர் குருநாத சுவாமி மற்றும் தாயார் அங்காள பரமேசுவரி ஆவர். விநாயகர், முருகன், நந்தி, அக்னிவீரபத்திரர், சப்த கன்னியர், கிராம தேவதைகளான இருளப்ப சுவாமி, சங்கிலி கருப்பண்ணசாமி, பெரிய கருப்பண்ணசாமி, மாயாண்டி சுவாமி, சப்பாணி சுவாமி, பேச்சியம்மன், இராக்காயி அம்மன் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia