திருவனந்தபுரம் மெயில் 1940 ஆம் ஆண்டு 19/20 என்ற வண்டி எண்ணுடன் சென்னை-கொச்சி துறைமுக முனையம் விரைவுவண்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சென்னைக்கும் கொச்சி துறைமுகத்துக்கும் இடையே செயல்பட்டு, பின்னர் சென்னை – கொச்சி துறைமுகம் மெயில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டது. 1961 ஆம் ஆண்டு இந்த ரயில்சேவைக்கு டீசல் இன்ஜின் வழங்கப்பட்டது. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில்நிலையம் வரை கோட்டயம் வழியிலான தொடருந்து வழித்தடம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இதன் சேவை விரிவுபடுத்தப்பட்டது.
நம்பர்.20 மெட்ராஸ் மெயில் என்ற மலையாளத் திரைப்படம் 1990 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருவனந்தபுரம் மெயிலில் எடுக்கப்பட்டவை.
பெட்டிகள்
24 ரயில் பெட்டிகளைக் கொண்டு திருவனந்தபுரம் மெயில் எக்ஸ்பிரஸ் செயல்படுகிறது. இதன் அமைப்பு முறை பின்வருமாறு:
சுமார் 16 மணி நேரத்தினை பயண நேரமாகக் கொண்டுள்ள திருவனந்தபுரம் மெயிலானது 919 கிலோ மீட்டர் தூரத்தினை மணிக்கு 57 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது. இதில் சரக்கு சம்பந்தப்பட்ட வசதிகள் இல்லை, ஆனால் உணவு வழங்கும் வசதிகள் உள்ளன. இதேபோல் திரும்பி வரும்போது பயண நேரம் 16 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்களைக் கொண்டுள்ளது. இதற்கு காரணம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி செயல்படும்போது மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்பட்டு 919 கிலோ மீட்டரை அடைவதே ஆகும். [3][4]