திருவம்பாடி சிவசுந்தர்
திருவம்பாடி சிவசுந்தர் (Thiruvambadi Sivasundar) (பிறப்பு; சுமார் 1964 - மார்ச் 11, 2018)[2] என்பது இந்தியாவின் கேரளாவில் திருச்சூரில் உள்ள திருவம்பாடி சிறீ கிருஷ்ணன் கோவிலில் வாழ்ந்த ஒரு இந்திய யானையாகும்.[3] இதன் அழகின் காரணமாக "அழகிந்தே தம்புரான்" என்றும் "பூரநாயகன்" என்றும் அழைக்கப்பட்டது. தொழில்இந்த யானைக்கு முதலில் பூக்கோடன் சிவன் என்று பெயரிடப்பட்டது. இது முன்பு மரத்தொழிற்சாலையில் பணிபுரிந்தது.[4] 2003ல், தொழிலதிபர் சுந்தர் மேனனால் ₹28 இலட்சத்துக்கு வாங்கப்பட்டது. மேனன் அதைத் திருவம்பாடி சிறீ கிருஷ்ணர் கோவிலில் தெய்வத்திற்குக் காணிக்கையாக வழங்கினார். [5] அன்று முதல் திருச்சூர் ஒவ்வொரு ஆண்டும் பூரம் திருவிழாவின் போது கோயில் சார்பில் கடவுள் சிலையை சுமந்து வந்தது. இறப்புஇது, மார்ச் 11, 2018 அன்று அதிகாலை 1:30 மணியளவில் இறந்தது. இது தனது வாழ்நாளின் கடைசி 67 நாட்களாக மலச்சிக்கலால், உடல் எடை குறைந்ததன் காரணமாக சிகிச்சை பெற்று வந்தது.[6] இதன் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.[7] பின்னர் கேரளாவில் உள்ள கொடநாடுக்கு இதன் உடல் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia