திருவாசி, திருச்சிராப்பள்ளி
திருவாசி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 93.62 மீ. உயரத்தில், (10°53′25″N 78°39′58″E / 10.8903°N 78.6661°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருவாசி அமையப் பெற்றுள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், திருவாசி ஊரின் மொத்த மக்கள்தொகை 1,840 பேர் ஆகும். இதில் 917 பேர் ஆண்கள் மற்றும் 923 பேர் பெண்கள் ஆவர்.[5] சமயம்இந்துக் கோயில்மாற்றுரைவரதீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று திருவாசி பகுதியில் அமைந்துள்ளது.[6] இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[7] அரசியல்திருவாசி பகுதியானது, மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, பெரம்பலூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia