திரு. வி. க. அரசினர் கலைக் கல்லூரி
திரு. வி. க. அரசு கலைக்கல்லூரி (Thiru Vi Ka Governent Arts College) என்பது இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் திருவாரூரில் செயல்பட்டுவரும் இருபாலருக்கான அரசினர் கலைக் கல்லூரியாகும். 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[1] இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. வரலாறு1970ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி அரசினர் கலைக் கல்லூரி என்ற பெயரில் 100 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி 1983ஆம் ஆண்டில் திரு. வி. கலியாண சுந்தரனார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி திரு. வி. க. அரசு கலைக் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அமைவிடம்நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் கிடாரம்கொண்டானில், நாகப்பட்டினத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், திருவாரூரில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் இந்த கல்லூரி அமைந்துள்ளது. வழங்கும் படிப்புகள்இளநிலை கலைப்பாடங்கள்
அறிவியல் பாடங்கள்
முதுநிலை கலைப்பாடங்கள்
அறிவியல் பாடங்கள்
மேற்கோள்கள்வெளியிணைப்புகள்இதனையும் காண்க |
Portal di Ensiklopedia Dunia